ஜஸ்ட் அரை மணி நேரம்தான் ஆனா ஒரு கோடி ரூபாய்.? தயாரிப்பாளரை புலம்ப விட்ட பிரபல நடிகை.!

பிரபல நடிகை ஒருவர் அரை மணி நேரம் நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கேட்டு தயாரிப்பாளரை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

பொதுவாக நடிகை என்றாலே சினிமாவில் குறிப்பிட்ட காலம் மட்டும் தான் மவுசு இருக்கும் அதிலும் பல நடிகைகள் மார்க்கெட் இருக்கும்போது சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என நினைப்பார்கள் அந்தவகையில் பல நடிகைகளை உதாரணத்திற்கு கூறலாம் அந்த வகையில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் தற்போது தன்னுடைய சம்பளத்தை கொஞ்சம் உயர்த்தி விட்டாராம்.

இவர் முதன்முதலில் வாரிசு நடிகரின் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இந்தத் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அதனால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும் அவர் நடிப்பில் சமீபகாலமாக வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் திரைப்படமான அமைந்துவிடுகிறது.

அதனால் அடுத்தடுத்து புதிய திரைப்படங்களில் மிக வேகமாக ஒப்பந்தமாகி வருகிறார் இவர் நடித்த கடைசி திரைப்படத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது அவரது சம்பளத்தை 4 கோடியாக உயர்த்தி விட்டாராம் அனைத்து விஷயங்களிலும் அட்ஜஸ்ட் செய்யும் அவர் சம்பள விஷயத்தில் மட்டும் கறார் காட்டி வருகிறாராம்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ஒரு திரைப்படத்தில் அரைமணிநேரம் நடிப்பதற்காக மட்டும் அந்த நடிகையை அணுகியுள்ளார் ஆனால் அந்த நடிகை சம்பளமாக ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளார் இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் அலறியடித்து புலம்பி வருகிறாராம். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு இவர்தான் செட் ஆவார் என வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த தகவல் கோடம்பாக்கத்தில் உள்ள நடிகைகளுக்கு தூக்கிவாரி போட்டுள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment