குரு 8 அடி பாஞ்சா சிஷ்யன் 16 அடி பாயிராரே.! 50 கோடி வாங்க போகும் பிரபல இயக்குனர்…

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் இயக்குனர் சங்கர் இவரிடம் உதவி இயக்குனராக பலர் பணிபுரிந்து சினிமாவில் தற்போது நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் அப்படி தங்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் இயக்குனர் அட்லி இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்திற்காகவும் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ரஜினியின் எந்திரன் திரைப்படத்திற்காகவும் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, உள்ளிட்ட முன்னணி  நச்சத்திர பட்டாளங்களை வைத்து ராஜா ராணி என்ற வெற்றி படத்தை கொடுத்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய இயக்குனர் பயணத்தை தொடங்கியவர் தான் இயக்குனர் அட்லி. ராஜா ராணி என்ற ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த அட்லீக்கு அடுத்த மூன்று படங்கள் அடித்தது ஜாக்பாட் என்பது போல தொடர்ந்து மூன்று படங்களை நடிகர் விஜய்யை வைத்து இயக்கினார்.

தெறி, மெர்சல், பிகில், என மூன்று படங்களை இயக்கி பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தார் அட்லி. ஆனால் இந்த மூன்று படம் வெளியானதும் இயக்குனர் அட்லி காப்பி கட் தலைவன் என்று விமர்சித்தனர். இப்படி தமிழில் பிரபலமாகிய அட்லி பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது இதனை தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்திற்காக இயக்குனர் அட்லி அவர்கள் 30 கோடி வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறாராம் இயக்குனர் அட்லி.

பொதுவாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய அளவில் சம்பளம் கொடுக்க யோசிக்கும் ஆனால் இயக்குனர் அட்லி என்ன மாய மந்திரம் போட்டார் என்று தெரியவில்லை அட்லீ இயக்கம் அடுத்த படத்திற்கு 50 கோடி சம்பளம் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரைக்கும் இயக்குனர் சங்கருக்கு எந்த ஒரு திரைப்படத்திற்காகவும் 50 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஆனால் அட்லி தற்போது 50 கோடி வரை சம்பளம் பெற இருப்பதாக கூறப்படுகிறது இதனால் குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற பெயரை அட்லீ அவர்கள் எடுத்து விட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment