ஃபுல்லா குடித்துவிட்டு ரோட்டில் விழுந்த கோபி.. பதறி அடித்து ஓடிய பாக்யா.. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் முடிந்த இன்றைய எபிசோடு

விஜய் டிவி தொலைக்காட்சியில் பல சிறப்பான சீரியல்கள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கின்றன அதில் ஒன்று பாக்கியலட்சுமி சீரியல்.. இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சூப்பராக போய்க்கொண்டிருக்கிறது அதன்படி எபிசோடில் நடந்தது..  கோபி ஒயின் ஷாப்புக்கு சென்று ஃபுல்லாக குடித்துவிட்டு காரை ஓட்டிக்கொண்டு வருகிறார்.

சுத்தமாக நிதானம் இல்லாததால் காரை அங்குமிங்கும் திருப்பி திருப்பி ஒட்டி வருகிறார் ஒரு கட்டத்தில் ஒரு  கல்லின் மீது மோதி கீழே விழுகிறார். காயம் அடைந்த கோபியை பார்த்த அங்கிருந்த ஒருவர் கோபியின் ஃபோனை எடுத்து அவருடைய தெரிந்த ரிலேஷனுக்கு போன் செய்துவிடலாம் என தேடுகிறார் அப்பொழுது மனைவி என்ற பெயரில் பாக்யாவை நம்பர் சேவ் செய்யப்பட்டு இருக்கிறது.

இதை பார்த்த அந்த நபர் உடனடியாக பாக்யாவுக்கு போன் செய்து உங்க வீட்டுக்காரர் குடிச்சிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கிறார் வந்து கூப்பிட்டு போங்க என பாக்யாவிடம் சொல்கிறார் இதை கேட்ட பாக்யாவுக்கு தூக்கி வாரிபோடுகிறது பிறகு எழில் அங்கு வர அவனிடம் விஷயத்தை சொல்ல முதலில் அப்படியே விடலாம் என சொல்ல பாக்கியம் விஷயத்தை தெரிஞ்சுகிட்டு என்ன அமைதியாய் இருக்கிறது.

என்று கேட்கிறார். உடனே எழில் சரி  போய் பாத்துட்டு வந்துடலாம் என சொல்லுகிறார் உடனே கிளம்பி போய் பார்த்தால் கோபி கீழே விழுந்து கிடக்கிறார். இதைப் பார்த்த ரெண்டு பேருக்கும் தூக்கி வாரி போடுகிறது அடுத்து என்ன செய்யலாம் என கேட்க.. எழில் இப்படியே விட்டுட்டு போகலாம்..

இல்லன்னா போலீசுக்கு போன் பண்ணி சொல்லலாம் என்று பாக்கிய சொல்ல அதெல்லாம் வேண்டாம் என கூறுகிறார் பிறகு எழில் சரி கூட்டிட்டு அவர் வீட்டுல விட்டுடலாம் என சொல்லுகிறார் அதற்கு பாக்கியா யோசித்து கடைசியாக ஒத்துக் கொள்கிறார் பிறகு டூவீலரில் எழில் வர சொல்லிவிட்டு பாக்கியா  கோபியை உட்கார வைத்து காரை ஓட்டிக்கொண்டு போகிறார் கோபி போதையில் உலர ஆரம்பிக்கிறார் இத்துடன் எபிசோடு முடிந்துள்ளது.

Leave a Comment