என்னுடைய கேர்லஸ் விஜய்சேதுபதிக்கு அடித்த அதிர்ஷ்டம்.! நான் நடிக்க வேண்டிய படம் அது.?

தமிழ் சினிமாவில் ரெட்டைசுழி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆரி. அதன்பிறகு முப்பரிமாணம், நெடுஞ்சாலை மற்றும் மாயா போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளார்.

அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் என்ற பெயரை தட்டி பிடித்தார்.  மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரது சிறப்பான திறமையை வெளிக்காட்டி ரசிகர்களை அவர் பக்கம் தன்வசப்படுத்தினார்.

மேலும் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி இந்த  திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆரி போன்ற பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார். மேலும் இந்த  திரைப்படம் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவகாற்று படத்தில் ஆரி தான் முதலில் நடிக்க இருந்தார். இவர் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிப்பது பற்றி பேச இயக்குனர் சீனு ராமசாமி காலை 10 மணிக்கு வரச் சொல்லி இருந்தார். ஆனால் ஆரியால் அந்த இடத்திற்கு போக முடியவில்லை ஆரி வீட்டிற்குள் அவருடைய உறவினர்கள் பத்திரிக்கை வைக்க வந்துள்ள நிலையில் ஆரி அம்மா கோவிலுக்கு சென்று விட்டார். நான் இயக்குனரிடம் போன் பண்ணி சொன்னேன் அவர் அதை கேட்காமல் நான் எத்தனை மணிக்கு வர சொன்னேன் நீ இப்பொழுது தான் வருவாய் என்று போனை படும் கோபமாக வைத்துவிட்டார்.

நான் அதன் பிறகு போன் பண்ணி கேட்டேன் அதற்கு அவர் என்னுடைய வேலை எல்லாம் முடிந்துவிட்டது நீ போனை வை நான் அப்புறம் பேசுறேன் என்று சொன்னார். அதன் பிறகுதான் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவகாற்று திரைபடத்தில்  நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் சிறப்பான முறையில் விஜய்சேதுபதி நடித்து இருப்பார்.

Leave a Comment