43 வயதில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்ட கோலி சோடா பட நடிகர். ! இதோ புகைப்படம்

Goli Soda film actor semban vinoth who divorced his first wife and got second marriage: மலையாள சினிமா திரைப்படங்களில் வில்லன் வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தவர் செம்பன் வினோத், இவருக்கு தற்போது வயது 43, 43 வயதில் இவர் இரண்டாம் திருமணம் செய்துகொண்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் கோலிசோடா. இந்த திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்கி இருந்தார். இப்படத்தில் சமுத்திரக்கனி, கவுதம்மேனன், ரோகிணி, சுபிக்ஷா கிருஷ்ணா ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் தில்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் செம்பன் வினோத்.

golisoda
golisoda

தன்னுடைய வில்லத்தனமான நடிப்பு தான் இவருடைய ஸ்டைல் என்று கூறலாம், இவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சமூக வலைத்தளத்தில் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு மாதத்திற்கு முன்பு இவரின் திருமணம் பற்றி தகவல்கள் வைரல் ஆகிய நிலையில், திருமண தேதி உள்ளிட்ட எதையும் வெளியிடாமல் தற்போது அவர் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டதை அறிவித்துள்ளார், அந்தப் பெண்ணின் பெயர் ஜோஸ் மரிய தாமஸ். இவர்தான் வினோத் என்பவரை திருமணம் செய்துகொண்டவர்.

golisoda actor
golisoda actor

Leave a Comment