“கஸ்தூரி” மேடம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு போங்க.. உங்களுக்காக ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார் ரசிகரின் கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த நடிகை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்கள் வரை முடிவடைந்துள்ள நிலையில் அந்த ஐந்து சீசன்களிலும் மக்களிடையே பெரிதும் பிரபலமடைந்து வெற்றிபெற முடியாத சில போட்டியாளர்களை வைத்து தற்போது ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இதில் அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், வனிதா, ஜூலி, சினேகன், தாடி பாலாஜி, சுஜா வருணி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி, நிரூப், அபிநய், சுருதி, தாமரைச்செல்வி, ஷாரிக் போன்ற 14 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இதில் ஓவியா கலந்து கொள்வார் என ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் சில காரணங்களால் கலந்து கொள்ள முடியவில்லை.

மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியில் ஓவியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் கஸ்தூரி இந்த வீட்டிற்கு வருவார் எனவும் எதிர்பார்த்தனர் ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாத பட்சத்தில் ரசிகர்கள் பலரும் வைல்டு கார்டில் நீங்கள் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் என கஸ்தூரிக்கு கமெண்ட் செய்து வருகின்றன.

மேலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வனிதா மற்றும் கஸ்தூரி இருவரும் கலந்து கொண்ட நிலையில் இவர்கள் இருவருக்கும் செட்டே ஆகாது. மேலும் வனிதா சண்டை போட்டே கஸ்தூரியை சில வாரங்களில் இருந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். இந்த நிலை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கஸ்தூரி இருந்தால் வனிதாவுக்கும் கஸ்தூரிக்கும் செம சண்டை வரும்.

அதை பார்த்த ரசிகர்களுக்கு நல்ல என்டர்டைன்மென்ட் ஆகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கஸ்தூரி எனக்கு வீடு இருக்கு, வேலை இருக்கு இந்த ஃபேக் நிகழ்ச்சிக்கு நான் செல்ல மாட்டேன் எனவும் கூறியிருந்தார். எனவே வைல்டு கார்டு என்ட்ரி ஆக கஸ்தூரி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வருவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment