காதலிக்க மறுத்தால் காதலனின் வெறித்தனம்.! மாணவிக்கு நடந்த கொடுமை

தற்பொழுது எல்லாம் உலகில் கொள்ளைகளும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் எம்.ஆர் கார்டன் பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா கல்லூரி பயின்று வருகிறார் இவர் சதீஷ் என்பவரை காதலித்து வந்தார் இவரும் எம்ஆர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் தான்.

இவர்கள் ஒரு சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள் இதனை அறிந்த இவர்களுடைய பெற்றோர்கள் இருவரையும் அழைத்து பேசியுள்ளார்கள் அதன் பிறகு ஐஸ்வர்யா ரிதிஷ்டம் மூன்று மாதமாக பேசாமல் இருந்து வந்தார் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஐஸ்வர்யா தனது பெற்றோர் அறிவுரையை புரிந்துகொண்டு ரிதிஷ்சை விட்டு விடலாம் என முடிவு செய்துள்ளார் ஆனால் ரிதிஷ் நேற்று மாலை ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்று என்னை திருமணம் செய்து கொள் என்று கேட்டுள்ளார் இதனை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா எனவே ரிதீஷ் கோபமடைந்து ஐஸ்வர்யாவை கத்தியால் குத்திவிட்டார்.

ஐஸ்வர்யாவின் அலறல் சத்தம் கேட்டவுடன் இவருடைய தந்தை ஓடி பார்த்துள்ளார் உடனே ரிதிஷ் அவருடைய தந்தையை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இருவரும் படுகாயமடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இவருடைய தந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனை அறிந்த போலீசார் கொலை செய்து விட்டு தப்பித்து ஓடிய ரிதீஷ்சை  தேடி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version