இயக்குனரால் இழுத்துக் கொண்டிருக்கும் கஜினி இரண்டாவது பாகம்.? தயாரிப்பாளர் அதிரடி அறிவிப்பு.!

தமிழ் சினிமாவில் ஓரளவுக்கு நல்ல திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர்களில் ஒருவர்தான் ஏ.ஆர். முருகதாஸ் இவரது இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துள்ளது.

அந்த வகையில் பார்த்தால் இவர் ரஜினியை வைத்து தர்பார் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தாலும் இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக வசூலில் மிகவும் சுதப்பிவிட்டதால் அடுத்ததாக எந்த நடிகரை வைத்து திரைப்படத்தை இயக்கலாம் என ஏ.ஆர். முருகதாஸ் பல நடிகர்களிடம் கதை சொல்லி வருவதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் இவர் கூறும் கதையை கேட்டு விட்டு பல நடிகர்களும் நிராகரித்து விடுகிறார்களாம் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் ஏ.ஆர். முருகதாஸ் கஜினி இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் சமீபத்தில் இணையத்தில் மிக வேகமாக வைரலானது.

ஆனால் அதனை பற்றி உண்மை தகவல் என்ன என்பது தெரியவந்துள்ளது அதாவது கஜினி திரைப்படத்தில் சூர்யாவிற்கும் ஏ.ஆர். முருகதாஸிற்கும் ஒரு சில பிரச்சனைகள் இருந்து வருகிறதாம் இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது என கஜினி திரைப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளாராம்.

surya

இவர்கள் இருவருமே ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே கஜினி இரண்டாம் பாகத்தை எடுத்து மக்களிடையே வெற்றிக்கான வைக்கலாம் எனவும் கூறியதாக இந்த தகவல் வெளியாகி உள்ளது

Leave a Comment

Exit mobile version