அஜித்திடம் கஜினி பட கதையை கூறிய முருகதாஸ் அஜித் கேட்ட முதல் கேள்வி பல வருடங்கள் கழித்து உண்மையை உடைத்த இயக்குனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் முதன்முதலில் தமிழில் தீனா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அஜித்தின் தீனா படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ரமணா திரைப்படம் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பு பெற்று விருதுகளையும் வாங்கியது.

அதன்பிறகு தளபதி விஜய்யின்  கத்தி மற்றும் சர்க்கார் ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டார். தற்போது முதன் முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தர்பார் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

இவருக்கு சினிமாவில் முதன் முதலில் வாய்ப்பு கொடுத்தது அஜித் என்பதால் மீண்டும் அஜித்தை வைத்து இயக்குவதற்காக கதை ரெடி பண்ணி வைத்துக் கொண்டு காத்துக்கொண்டிருக்கிறார். எப்பொழுது அஜித்திடம் இருந்து அழைப்பு வரும் என காத்துக்கொண்டிருக்கிறார் முருகதாஸ்.

இந்த நிலையில் கஜினி படத்தின் பொழுது நடந்த சில சுவாரசியமான சம்பவத்தை ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்துள்ளார். என்னவென்றால் கஜினி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான். அப்பொழுது கஜினி திரைப்படத்திற்காக நான் சிக்ஸ் பேக் வைக்கவா என்று என் முருகதாசிடம் அஜித் கேட்டுள்ளார்.

ஆனால் முருகதாஸுக்கு சிக்ஸ்பேக் அப்படி என்றால் என்ன என்றே தெரியவில்லை ஆனால் ஹிந்தி ரீமேக்கில் கஜினி திரைப்படத்தை இயக்கும் பொழுது இந்த யோசனையை அமீர்கனிடம் கூறியுள்ளார். அப்பொழுது அஜித் சொன்ன யோசனை தற்போது நிறைவேறியுள்ளதாக பெருமையாக முருகதாஸ் கூறியுள்ளார்.

Leave a Comment