இன்னொரு அவார்ட் ரெடி பண்ணுங்க.. மாறி செல்வராஜின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் தற்பொழுது தன்னுடைய புதிய படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பிடித்த மாரி செல்வராஜ் தொடர்ந்து தன்னுடைய வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் எடுத்தார். இந்த படத்தில் சமூகத்தில் எவ்வாறு சாதி வெறி பிடித்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது. இந்த படத்தினை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படமும் சாதியை அடிப்படையாக வைத்து வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.

இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜ் விக்ரமின் மகன் துருவ் விக்ரம்மை வைத்து புதிய படம் இயக்குனர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில், வடிவேலு ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தினை தொடர்ந்த அடுத்ததாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சார்பில் வெப் சீரியல் ஒன்றை இயக்க இருக்கிறாராம் இதில் கலையரசன் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் திருநெல்வேலிக்கு அருகே உள்ள இடங்களில் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருப்பதாகவும் அதற்கான பூஜை வரும் நவம்பர் 24ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவித்துள்ளார். அது குறித்த அவர் வெளியிட்ட போஸ்டரில் வாழை இலைக்கு நடுவேன் நான்கு சிறுவர்கள் ஓடும் காட்சி இடம் பெற்றுள்ளது எனவே இதனைப் பார்த்து ரசிகர்கள் இந்த படம் எதைப் பற்றி இருக்கும் என தெரிந்து கொள்வதில் ஆவலாக இருந்து வருகிறார்கள்.

Leave a Comment