கவினை காதலிதத்து உண்மைதான்.. எங்கள் ரிலேஷன்ஷிப் முறிந்து போனதற்கு இதுதான் காரணம்.! லாஸ்லியா பேச்சு.

சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே பெரும் பிரபலம். இந்த நிகழ்ச்சிக்கு என்று எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர் அந்த வகையில் பிக்பாஸ் முதல் சீசன் தொடங்கி தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிவடைந்து உள்ளது.  இந்த ஐந்து சீசன்களுமே மக்கள் ஒவ்வொருவருக்கும் ஃபேவரட் ஆன சீசன்களாகும்.

அந்த வகையில் பிக்பாஸ் மூன்றாவது சீசன் மக்கள் பலராலும் மறக்க முடியாத ஒரு சீசன் ஆகும்.  அந்த அளவிற்கு செம என்டர்டெய்மெண்ட் ஆக ஒளிபரப்பாகி நிறைவடைந்தவை. இதில் கலந்துகொண்ட தர்ஷன் முகின், கவின், லாஸ்லியா, சாண்டி போன்ற பலரும் மக்கள் மத்தியில் பெறும்  பிரபலம்.

பிக் பாஸ் ஒவ்வொரு சீசன்களிலுமே காதல், சென்டிமென்ட், கோபம், மகிழ்ச்சி, அழுகை  என பல உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருந்தனர். அப்படி மூன்றாவது சீசனில் கவின் மற்றும் லாஸ்லியா இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவருக்கும் இந்த நிகழ்ச்சியில் நல்ல புரிதல் இருந்தது.

ஒரு கட்டத்தில் லாஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டில் வந்து நீ எதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்த என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின்பு கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் நாம் எதுவாக இருந்தாலும் வெளியில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என விளையாட்டில் கவனம் செலுத்தி சிறப்பாக விளையாடி வந்தனர்

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு லாஸ்லியா தர்ஷன், சாண்டி போன்ற சிலருடன் இன்றும் கனெக்ஷனில் இருந்தாலும் கவினுடன் பேசாமல் இருப்பதை பல இன்டர்வியூகளில் லாஸ்லியாவின் கேட்டுள்ளனர்.  தற்போது ஒரு பேட்டி ஒன்றில் கவின் குறித்து லாஸ்லியா வெளிப்படையாக பேசியுள்ளார்.  பிக்பாஸ் வீட்டிற்குள் எங்களுக்குள் இருந்த ரிலேஷன்ஷிப் வெளியில் வந்தபிறகு தொடரவில்லை. எங்கள் இருவருக்கும் செட்டாகவில்லை அதனால்தான் பிரிந்து விட்டோம் என கூறியுள்ளார். இதோ அந்த முழு வீடியோ.

Leave a Comment