சூப்பர் ஸ்டாருக்கும் உலக நாயகனுக்கும் இதுதான் வித்தியாசம்.! உண்மையை போட்டு உடைத்த கேஎஸ் ரவிக்குமார்.!

தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். மேலும் இவர் திரைப்படம் என்றாலே குடும்ப சம்பந்தமான திரைப்படமாகத்தான் இருக்கும்.  ஆனால் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தரும்.

நடிகர் ரஜினியை வைத்து முத்து,படையப்பா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் வழியாக லிங்கா என்ற திரைப்படம் இயக்கினார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த திரைப்படம் வெற்றியைப் பெற்றுத் தரவில்லை.

உலக நாயகன் என்றழைக்கப்படுபவர் கமல்ஹாசன். இவரை வைத்து சில திரைப்படங்கள் கேஎஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார். தெனாலி மற்றும்  அவ்வை சண்முகி என்ற திரைப்படம் ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுதந்து கமலஹாசன் வாழ்க்கையில் திருப்பு முனையை தந்தது.

மேலும் இவர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில்  நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்  நடிப்பில் சில  திரைப்படங்கள் உருவாகியுள்ளது. இந்த நிலையில்  சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர்களின் வித்தியாசத்தை பற்றி கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் கமல் இதுதான் எங்களுக்கு சரியான வழி என்று முடிவு செய்து அந்த வழியில் அவர்கள் இருவரும் பணியாற்றி வருகிறார்கள். இரண்டு பேருமே ஒரே நேரத்தில் அவரவர் முடிவை எடுத்து சினிமாவில் பயணித்து வருகிறார்கள்.  அதனால தான் இவர்களால் இதுவரையும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வர காரணம் என்று ஒரு பேட்டியில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

Leave a Comment