பயத்தில் இருக்கும் “RRR” பட தயாரிப்பாளர்.! இயக்குனர் ராஜமௌலி சொன்னார் தெரியுமா.?

சமீபகாலமாக சிறப்புக்குரிய கதைகளை மிகப் பெரிய பட்ஜெட் போட்டு எடுப்பதால் அந்த திரைப்படம் கோடிக்கணக்கில் வசூல் பார்க்கின்றன. அந்த வகையில் ஷங்கரை தொடர்ந்து தற்போது தெலுங்கில் ராஜமவுலி எடுக்கும் படம் ஒவ்வொன்றும் 400 கோடி பட்ஜெட் படம் ஆகவே இருப்பதோடு அந்த படங்கள் சுமார் 800 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்துகிறது இதனால் தற்போது ராஜமௌலி தொட முடியாத இடத்தில் இருக்கிறார்.

பாகுபலி சீரிஸ் வெற்றியை தொடர்ந்து அவர் இயக்கும் புதிய திரைப்படம் தான் ஆர் ஆர் ஆர் (ரத்தம் ரணம் ரவுத்திரம்) என இந்த திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட சுமார் 400 கோடி பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தில் டாப் ஜாம்பவான்கள் பலர் நடிக்கின்றனர் அந்தவகையில் ராம்சரன், ஜூனியர் என்டிஆர், பாலிவுட் நடிகையான ஆலியா பட், அஜய் தேவ்கன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தற்போதுவரையும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே செல்கிறது.இந்த படத்தை 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது அதற்குள் தயாரிப்பு நிறுவனம் தற்போது 900  கோடிக்கு விற்பனை செய்துள்ளது.

விரைவில் படம் அதிகாரபூர்வமாக வருகின்ற அக்டோபர் 13-ம் தேதி வெளியாக அறிவித்தனர் ஆனால் படத்தின் ஷூட்டிங் இன்னும் 30 நாட்களுக்கு மேல் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் படத்தின் தேதியை தற்பொழுது மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

இதனால் தயாரிப்பு நிறுவனம் சற்று பதட்டத்தில் இருக்கிறார். படத்தின் பட்ஜெட்டை விட லாபம் பார்க்க முடியுமா என ராஜமௌலியிடம் கேட்டதற்கு எல்லாம் மேல இருக்குறவன் கையை மேலே தூக்கி  விட்டாராம்.

Leave a Comment