பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர்கள்.! அத்துமீறிய திரையரங்கு ஊழியர்.. வைரலாகும் வீடியோ…

நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்களும் இந்த திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வரும் பத்து தல திரைப்படம் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இன்று வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தை பார்க்க நரிக்குறவர்கள் டிக்கெட் எடுத்து படம் பார்க்க சென்று இருந்தனர் ஆனால் அங்கு அந்த தியேட்டர் ஊழியர் ஒருவர் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் அதை பதிவிட்டு இருக்கிறார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் அவருக்கு கண்டனக் குரல் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வந்து வருகிறார்கள்.

அதாவது சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் பத்து தல திரைப்படம் இன்று ஓடிக்கொண்டிருந்தது. பொதுவாக இந்த திரையரங்கிற்கு பல பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய படங்களை பார்க்க வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பேமசாக இருக்கும் ரோகிணி திரையரங்கில் பத்து தல திரைப்படத்தை பார்க்க வந்த நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த காவிரி அவர்கள் முறைப்படி இந்த படத்திற்கு டிக்கெட் எடுத்து சென்று இருக்கிறார்.

ஆனால் இவர்கள் நரிக்குறவர் என்பதால் அங்கு இருந்த திரையரங்கு ஊழியர் ஒருவர் இவர்களை தடுத்து நிறுத்தி இருக்கிறார். அந்தப் பெண் தன்னுடைய இரண்டு, ஆறு, எட்டு, மற்றும் பத்து வயது குழந்தைகளுடன் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவரை அவமதித்து திரையரங்கை விட்டு வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது இதை பார்த்த ஒருவர் அதை வீடியோ எடுத்து அதை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார் இதை பார்த்த ஜிவி பிரகாஷ் அவர்கள் அந்த சகோதரியையும் சகோதரர்களையும் தாமதமாக படம் பார்க்க அனுப்பியதாக விவரம் தெரிகிறது எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பதிவிட்டு இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அந்த தியேட்டர் ஊழியர் மீது காவிரி கொடுத்த புகாரின் பெயரில் எஸ் சி எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Comment