சின்னத்திரையில் ரீல் ஜோடியாக நடித்து ரியல் ஜோடியாக மாறிய நான்கு ஜோடிகள்..! முழு விவரம் இதோ..!

பொதுவாக சினிமாவில் சில பிரபலங்கள் ஒன்றாக சேர்ந்து திரைப்படம் நடிக்கும் போது அவர்களுக்குள் காதல் ஏற்படுவது வழக்கம்தான் அந்த வகையில் அதன் பிறகு அவர்கள் திருமணம் செய்து கொள்வதும் ஒரு வழக்கமான செயலாக மாறிவிட்டது.

ஆனால் இதுபோன்ற செயல் தற்போது சின்னத்திரையிலும் நடந்து வருகிறது இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல் சுமார் இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் அந்த வகையில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதற்கு  அதிக வாய்ப்பு இருக்கிறது.

அந்தவகையில் தங்களுடைய வாழ்க்கையை  சீரியல் உடன் ஒப்பீட்டு செல்லும் பொழுது கடைசிவரை தன்னுடன் நடிக்கும் பிரபலம் கூடவே இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகையில் இவர்களுக்குள் காதல் ஏற்படுவது மட்டுமின்றி அது திருமணத்திலும் முடிந்து விடுகிறது.

அந்த வகையில் ரில் ஜோடியாக சின்னத்திரையில் நடித்து ரியல் ஜோடியாக பல்வேறு பிரபலங்கள் மாறி உள்ளார்கள்  அதில் சாயா சிங் மற்றும் கிருஷ்ணா, ஆலியா மற்றும் சஞ்சீவ், ஆரியன் மற்றும் ஷபானா, மதன் மற்றும் ரேஷ்மா இதில் ஆரியன் மற்றும் மதன் ஆகிய இரு தம்பதியினரும் புதிதாக திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

serial jodi

அந்த வகையில் இவர்கள் ஜோடி ஆனது எப்படி என்றால் ஆனந்த புறது வீடு என்ற சீரியலில் நடிக்கும் பொழுது கிருஷ்ணா மற்றும் சாயாசிங் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அதேபோல ஆல்யா மற்றும்  சஞ்சீவ் ராஜா ராணி சீரியல் மூலமாக காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக காதல் ஏற்பட்டு சபானா மற்றும் ஆரியன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் அதேபோல மதன் மற்றும் ரேஷ்மா பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்த பொழுது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் இவர்கள் அனைவரும் மிக சிறந்த ஜோடியாக தற்போது ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

Leave a Comment

Exit mobile version