முதன்முறையாக பிரபல முன்னணி நடிகருடன் இணைந்த நயன்தாரா.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் தவிர்த்துள்ளார்.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்கள் அளவிற்கு சம்பளம் வாங்கும் ஒரே ஒரு நடிகையாக இருந்து வரும் இவர் ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்தாலும் கதாநாயகிகளின் படம் வெற்றி பெறும் என நிரூபித்து காட்டினார்.

இந்நிலையில் தற்போது இவர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமூக காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தன்னுடைய அடுத்த படத்தில் இணைய உள்ளார்.

இவருடைய நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு கனெக்ட் திரைப்படம் வெளிவந்து கலவை விமர்சனத்தை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் முதன்முறையாக நயன்தாரா சாக்லேட் பாய் நடிகருடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் இது குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தனுஷின் யாரடி நீ மோகினி, குட்டி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மித்திரன் ஜகவர் தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளார். அவர் இயக்கப் போக அடுத்த புதிய படத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் எனவும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாராவிடம் சம்பளம் குறித்த தகவல்கள் தற்பொழுது பேசி வருவதாகவும் அதற்கு நயன்தாரா ஒப்புக்கொண்டால் இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. மாதவனுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் இவர்களுடைய கூட்டணி இணையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment