பிக்பாஸ் சீசன் 5 – ல் மக்களின் மனதை வென்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜுக்கு இந்த நடிகரை தான் ரொம்ப பிடிக்குமாம்.! அவரே கூறிய தகவல்.

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் சீசன் சீசனாக நடத்தப்பட்டு வருகிறது சொல்லப்போனால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டை எகிற வைப்பதே பிக்பாஸ் தான். அந்த காரணத்தினால் தான் இது சீசன் சீசனாக நடைபெறுகிறது ஐந்தாவது சீசன் துவங்கி நான்கு வாரங்களுக்கு மேல் ஆகி உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் முப்பத்தி நான்கு நாட்கள் ஆகிறது.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் இப்ப தான் பெரிய அளவு சண்டையே ஆரம்பித்திருக்கிறது ஆனால் அதற்குள் பல பிரபலங்கள் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர் காரணம் அந்த அளவுக்கு மக்களின் மனதில் இடம் பிடிக்க வில்லை என்பது கூறப்படுகிறது அந்த காரணத்தினால் தான் அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேஷன் வைத்து வெளியேறி உள்ளனர். ஆட்கள் குறைய குறைய தற்போது ஒருவரை ஒருவர் பேசித்தான் ஆகவேண்டும் அதன் மூலம் சண்டை கன்பார்ம் வரும் என்பதை சரியாக பிக்பாஸ் கணித்துள்ளது.

இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் முதலாவதாக நமிதா மாரிமுத்து சில காரணங்களால் வெளியேறினார் அதன்பின் எலிமினேஷன் ரவுண்டில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு நேற்று சுருதி ஆகியோர்கள் குறைந்த வாக்குகளை மக்கள் அவர்களை வெளியேறினார். இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் சீசன் 5 – ல் ஒரு சிலர் மட்டும் இதுவரை பயணிப்பார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒருவராக நிச்சயம் ராஜு இருப்பார் என்பது தெரியவந்துள்ளது சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு பிக் பாஸ் வீட்டில் சூப்பராக பயணிக்கிறார். பெரிய சண்டை என்றால் அந்த இடத்தில் சைலண்டாக இருந்து கொள்வது அதேசமயம் மக்கள் கூடும் இடத்தில் காமெடியை வெளிப்படுத்துவதே தன்னை நம்புபவர்களுக்கு உதவி செய்வதுமாக ராஜீ இருந்து கொண்டு தனது சிறப்பாக தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

இவர் நிச்சயம் பைனல் இருப்பார் என அங்கிருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியும் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ராஜு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் தளபதி விஜயின் தீவிர ரசிகன் சுறா படத்தை நான் முதல் நாளில் 1,400 ரூபாய் டிக்கெட் எடுத்துக்கொண்டு போய் பார்த்தேன் என்று அவர் பேசி உள்ள செய்தி தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

Leave a Comment