சாலார் படத்தை தொடர்ந்து பிரசாந்த் நீல் அடுத்ததாக இந்த “மாஸ் ஹீரோவுடன்” இணைய உள்ளார்.? வைரலாகும் தகவல்.

சினிமா உலகில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் எப்பொழுதும் நல்லதொரு வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் மாறுபட்ட கதை களத்தை எடுத்து இயக்குனருக்கு நல்ல விருந்து கிடைப்பதோடு அந்த படங்கள் மிகப் பெரிய அளவில் ரீச் பெறுவதால் அந்த இயக்குனர்கள் பெயரையும், புகழையும் சம்பாதிப்பது திரையுலகில் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படுகின்றனர்.

அந்த வகையில் வெற்றிமாறன் போன்றோர் திரை உலகில் தற்போது முக்கிய இயக்குனராக பார்க்கப்படுகின்றனர். அதுபோலவேதான் கன்னட சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக வந்து இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராகவும் மாறி உள்ளவர் பிரசாந்த் நீல்.

இவர் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வரலாற்று சாதனையை படைத்தது. கன்னட சினிமாவில் இதுபோன்ற ஒரு படத்தை இதுவரையும் யாரும் எடுத்ததில்லை மற்றும் இது போன்ற எச் டி தரத்தில் படத்தை எடுத்து சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் எடுத்ததற்காக பல விருதுகளையும் தட்டினார்.

கேஜிஎப்  இரண்டாம் பாகம் தற்போது வெற்றிகரமாக எடுத்து முடிந்துள்ளார். விரைவில் படம் வெளியாக இருக்கிறது இதைத்தொடர்ந்து அவர் பிரபாஸ் உடன் இணைந்து சாலார் என்ற திரைப் படத்தில் கமிட்டாகி பணியாற்றி வருகிறார் அதனைத் தொடர்ந்து அடுத்த படத்திற்கான நடிகரையும் தற்போது தேர்வு செய்து உள்ளார் பிரசாந்த் நீல். அந்த வகையில் ஜூனியர் என்டிஆர் தெலுங்கு சினிமாவில் மிகப் பெரிய மார்க்கெட் இருப்பதால் அவரை கமீட் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

ஜூனியர் என்டிஆர் தற்போது “RRR” என்ற திரைப்படத்தில் நடித்து வருவதால் மேலும் அவருக்கு மார்க்கெட் உச்சத்தை தொடும் இந்த சமயத்தில் பிரசாந் நீல் அவருடன் கைகோர்த்து மிகப்பெரிய வெற்றியை ருசிக்க முடியும் என கணக்கு போட்டு உள்ளனர்.

Leave a Comment