மிஸ்கினை தொடர்ந்து லியோ படப்பிடிப்பை நிறைவு செய்த மேலும் ஒரு பிரபலம்.! வெளியான பதிவை பார்த்து உற்சாகத்தில் ரசிகர்கள்…

மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், என தொடர் வெற்றி படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவருடைய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டு வரும் நிலையில் அடுத்தடுத்து உருவாக்கம் இவருடைய படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது என்றே சொல்லலாம்.

அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது காஷ்மீரில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விஜய் மற்றும் லோகேஷ் நாகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

இதனை அடுத்து தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இயக்குனர் மிஸ்கின் அவர்கள் லியோ படத்தின் படப்பிடிப்பு தன்னுடைய காட்சிகள் முடிவடைந்து விட்டதாக ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் லியோ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்த சில தகவல்களையும் கூறி இருந்தார். மேலும் மிஸ்கினை தொடர்ந்து மேலும் ஒரு இயக்குனர் லியோ திரைப்படத்தின் படபிடிப்பை முடித்துவிட்டு வெளியேறி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், திரிஷா, பிரியா ஆனந்த், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் தற்போது லியோ திரைப்படத்தில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்து விட்டதாக ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் விரைவில் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறியிருக்கிறார் இதனால் ரசிகர்கள் லியோ திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

Leave a Comment