இன்ஜினியரிங் முடித்துவிட்டு சினிமாவில் கெத்து காட்டிய ஐந்து பிரபலங்கள்..!

சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல்வேறு நடிகர்களும் நடிகைகளும் பொறியியல் படிப்பை படித்து முடித்துள்ளார் அந்த வகையில் இவர்களுக்கு சினிமாவின் மீது அதிக ஆர்வம் இருந்தததன் காரணமாக தனது தொழிலினை சினிமா துறைக்கு மாற்றி விட்டார்.

அந்த வகையில் இன்ஜினியரிங் படித்துவிட்டு இன்று சினிமாவில் மிகப் பிரபலமாக இருக்கும் பிரபலங்களை பற்றி பார்ப்போம்.

நடிகர் கார்த்திக் இவர் மூத்த நடிகர் சிவகுமாரின் மகன் அவர் இவருடைய அண்ணன் தான் பிரபல முன்னணி நடிகர் சூர்யா. இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சென்னையில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு மாதந்திர சம்பளத்திற்காக  வேலை செய்து வந்துள்ளார். பின்னர் சினிமாவில் இருக்கும் ஆர்வத்தின் காரணமாக தற்போது பிரபல நடிகராக வளர்ந்துள்ளார்.

karthik-12
karthik-12

நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியில் உள்ள ஜேஜே கல்லூரியில் என்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இவ்வாறு தன் கல்லூரியில் படிக்கும் பொழுது அவர்  மேமிகிரி மற்றும் நகைச்சுவை ஆகிய இரண்டிலும் ஆர்வம் காட்டியதன் காரணமாக தொலைக்காட்சி தொகுப்பாளராக பிரதிபலித்தார் ஆனால் இன்று தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார்.

நடிகர் மாதவன் சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரியில் மெக்கானிக்  என்ஜினீயரிங் படித்துள்ளார். இவ்வாறு இவர் படித்து முடித்த கையோடு விளம்பர படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்ததன் காரணமாக இதனை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களால் மேடி என கொண்டாடப்பட்டு உள்ளார்.

madhavan
madhavan

நடிகர் பிரசன்னா இவர் திருச்சியில் உள்ள சாரநாத் கல்லூரியில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்து முடித்தவர் அந்த வகையில் இவர் 5 ஸ்டார் திரைப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தால் அதன் மூலமாக பிரபல நடிகராக வலம் வந்தது மட்டுமல்லாமல் நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்டார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இவர் தமிழ் சினிமாவில் மிகப் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் புதுக்கோட்டையில் உள்ள மூகாம்பிகை என்ற கல்லூரியில்தான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து உள்ளார். அந்தவகையில் இவர் இயக்கிய மின்னலே என்ற திரைப்படமும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

Leave a Comment