தம்பி உன்ன வளரவிட்டா நாங்க என்ன பண்றது… சிவகார்த்திகேயனை நான்கு திசையிலும் கட்டம் கட்டிய 5 நடிகர்கள்.! ஆறாவதாக இணைந்த பிரபலம்…

Five Actors That Stop Sivakarthikeyan From Growing Up : நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் பிறகு ஒரு சில காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு சினிமாவில் துணை நடிகனாக நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் தனுஷ் தான் இவரை சினிமாவில் அறிமுகம் செய்தது தன்னுடைய அயராத உழைப்பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் 30 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராகவும் வளர்ந்துள்ளார்.

அதேபோல் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பிடிக்காமல் அவரின் உழைப்பிற்கு பல விதங்களில் துரோகம் செய்து வளர்ச்சியை கெடுக்க நினைக்கிறார்கள், அந்த வகையில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு சில நடிகர்களும் இடைஞ்சலாக இருந்துள்ளார்கள் அவர்கள் யார் யார் என்ற லிஸ்டை இங்கே காணலாம்.

நடிகர் கார்த்தி முதன் முதலில் நடித்த திரைப்படம் பருத்திவீரன் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது அதன் பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வந்தது கார்த்தி வீழ்ச்சி அடைந்த அதே சமயத்தில் சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிக்க நுழைந்தார் அதே சமயத்தில் அசுர வளர்ச்சியையும் பெற்றதால் கார்த்தி கொஞ்சம் பொறாமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனை அறிமுகம் செய்தது தனுஷ் தான் ஆனால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து கொஞ்சம் பொறாமைப்பட்டு அந்த வளர்ச்சியை தடுக்கும் விதமாக ஒரு சில காரியங்களை செய்தார் என சிவகார்த்திகேயன் மேடையிலேயே ஓபன் ஆக கூறி இருந்தார். அதேபோல் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்த சிவகார்த்திகேயனின் வளர்ச்சி சிம்புவுக்கும் பிடிக்கவில்லை அதனால் சிம்புவும் கொஞ்சம் சிவகார்த்திகேயன் மீது ஒறண்டையாக இருந்தார்.

அதேபோல் நடிகர் ஜெயம் ரவி உச்சநடிகராக இருந்த பொழுது சிவகார்த்திகேயனை பார்த்து கடுப்பானார் அதற்கு காரணம் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தான் வாரிசு நடிகர்களாக இருந்து வரும் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஆகிய நடிகர்கள் ஒரே குடும்பமாக இருந்த நிலையில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி இவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தது.

இவர்களைத் தொடர்ந்து யாரெல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாம போச்சு என அருண் விஜயையும் தன்னுடைய பங்கிற்கு சிவகார்த்திகேயன் மீது வன்மத்தை கொட்டினார். அது ஒரு பக்கம் புகைந்து கொண்டிருக்க சூர்யாவின் சிங்கம் 2, 24 ஆகிய திரைப்படங்கள் 100 கோடி வசூலை அடைந்த நிலையில் சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் சூர்யாவுக்கு டப் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து 100 கோடி கிளப்பில் இணைந்தது சூர்யா ரசிகர்களையும் கோபத்தை ஏற்படுத்தியது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் மீது பல நடிகர்கள் கடுப்பில் இருக்கிறார்கள் கோவத்தில் இருக்கிறார்கள் இந்த நிலையில் புது வில்லனாக சிவகார்த்திகேயனுக்கு டி இமான் முளைத்துள்ளார் இவர் சிவகார்த்திகேயன் குறித்து பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு பச்சை துரோகம் செய்துவிட்டார் எனக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி சிவகார்த்திகேயனை சுற்றி வில்லன்களாகவே முளைத்து கொண்டிருக்கிறார்கள்.