இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மற்றும் செய்ய போகும் உங்களின் மனம் கவர்ந்த டிவி நடிகைகள்.!

திரையுலகில் சில நடிகைகளின் கணவர்கள் இறந்திருப்பார்கள் இல்லை என்றால் அவர்களுடைய முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து ஆகி இருக்கும் காலப்போக்கில் அந்த நடிகைகள் இரண்டாவது திருமணம் செய்துகண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த விஷயம் திரைப்பட நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் சீரியல் நடிகைகளுக்கும் நடந்து அப்படி இரண்டாவது, மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் யார் என்ற லிஸ்டை தற்போது காண உள்ளோம். அந்த வகையில்,

பவானி ரெட்டி – நம்ம சின்னத்தம்பி சீரியலின் மூலம் பிரபலமடைந்தவர். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சூப்பர் சீரியல் ஆர்டிஸ்ட் ஆவார். இவர் 2013இல் அவங்களுடைய கோச்சரான பிரதீப் அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களின் குடும்ப பிரச்சனை காரணமாக பிரதீப் அவர்கள் சூசைட் பண்ணி இறந்துவிட்டார்கள். கணவர் இருந்ததை தாங்க முடியாமல் மிகவும் வேதனை பவானி ரெட்டி மீண்டும் சீரியலில் நடிப்பதை தொடர்ந்தார். அந்த வகையில் வந்த சீரியல்தான் ரெட்டைவல் குருவி ஆரம்பத்திலிருந்தே இவர்களுக்கு ஒரு சில ரசிகர்கள் இருந்து வந்தனர்.

அதன்பிறகு சின்னதம்பி சீரியல் நந்தினி என்ற கேரக்டரில் நடித்து வந்தார் இவருக்கு ஜோடியாக பிரஜின் அவர்கள் நடித்திருந்தார் இந்த சீரியலின் மூலம் தான் இவர்களுக்கு அதிகபடியான ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. தற்போது பாமணி ரெட்டில் ராசாத்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர் தற்பொழுது தனது மிகவும் நெருங்கிய தோழனான ஆனந்த் அவர்களை தான் கூடிய சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இருக்கிறார்.

மைனா நந்தினி -இவருடைய நடிப்பு மற்றும் காமெடி சீன்ஸ் மூலமாக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார். இவர் ஆரபத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் தான் தனது வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தார் அதன்பிறகு தென்மேற்கு பருவகாற்று என்ற திரைப்படத்தில் நல்ல கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கினார். அதன் பிறகு இவருக்கு மலர பிள்ளை என்ற காமெடி உலகம் முழுவதும் பிரபலமாக பேசப்பட்டது.

அதன் பிறகு பல சீரியல்களில் நடித்து வந்தார் இவர் திரையுலகில் பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணமாக விளங்கியது சரவணன் மீனாட்சி சீரியல் தான் அதில் மைனா என்ற கேரக்டர் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவரை பெரும்பாலும் மைனா என தான் அழைப்பார்கள்.

நந்தினி அவர்கள் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் சில பிரச்சனையின் காரணமாக கார்த்திக் சூசைட் செய்து இறந்துவிட்டார். அதன்பிறகு நந்தினி அதிலிருந்து வெளிவருவதற்கான எல்லா சீரியல், ஷோ போன்றவற்றில் தன் கவனத்தை திசைதிருப்பி வந்தார். அந்த வகையில் வெளியான ஒன்றுதான் நீலி, கலக்கப்போவது யாரு போன்ற பல பொது நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகண்டார்.

அதன்பிறகு யோகேஸ்வரன் என்பவரை காதலிக்கிறேன் என ஓப்பனாக சொல்லியிருந்தார். இவரும் ஒரு சீரியல் நடிகர் தான் தற்பொழுது இவர் நாயகி சீரியலில் நடித்து வருகிறார். தற்பொழுது தான் இவர்களுக்கு திருமணம் ஆகியது  மைனா 5 மாத கர்ப்பமாக உள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிலையல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நந்தினி அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

நித்யா ராம் – நித்யா ராம் என்று சொன்னால் பெரும்பாலானோருக்கு தெரியாது நந்தினி சீரியலின் கங்கா என்று சொன்னால்தான் அனைவருக்கும் தெரியும். நித்யா ராம் தமிழ் சீரியலில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல சீரியல்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு கன்னட திரைப்படத்திலும் ஹீரோயினியாக நடித்து வருகிறார்.

நித்யா ராம் அவர்கள் 2014 ஆம் ஆண்டில் வினோத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் நந்தினி என்ற சீரியலில் நடித்து வருகிறார் இந்த சீரியல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரிலீஸ் ஆனது. நித்யா ராம் அவர்கள் 2019ஆம் ஆண்டில் கௌதம் என்ற ஆஸ்திரேலிய பிஸ்னஸ் மென்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

பிரியங்கா – ரோஜா சீரியல் பிரியங்கா இவருடைய சொந்த ஊர் ஆந்திரா. இவர் தெலுங்கில் பல சீரியல்களில் நடித்துள்ளார் ஆனால் இவருக்கு வெள்ளித்திரை நடிகையாக நடிக்க வேண்டும் என்று ஆசை. அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் கடைசியாக காஞ்சனா 3யில் நல்ல கேரக்டரில் நடித்திருந்தார்.

அதன்பிறகு எந்த ஒரு பட வாய்ப்பும் சரியாக அமையாத காரணத்தினால் மீண்டும் ரோஜா நாடகத்தில் இணைந்து சீரியல்களில் நடிப்பதை தொடர்ந்துள்ளார். இந்தவகையில் இவருடன் நடித்த ஒரு நடிகருடன் எங்கேஜ்மென்ட் ஆனது ஆனால் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக திருமணத்தை நிறுத்துவிட்டனர்.

திவ்யதர்ஷினி – திவ்யதர்ஷினி தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீ காந்த் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமான இரண்டு வருடங்களிலேயே விவாகரத்து ஆகிவிட்டது. இந்த நிலையில் டிடி அவர்களுக்கு உண்மையாகவே மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Comment