விஜய் கைவிட்ட காரணத்தினால் சீரியலில் நடிக்க தொடங்கிய எஸ்ஏ.சந்திரசேகர்.! கிழக்கு வாசல் சீரியலின் முதல் நாள் ஷூட்டிங் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இந்த அளவிற்கு சினிமாவில் முன்னேறுவதற்கு முக்கிய காரணம் இவருடைய தந்தை எஸ்.கே சந்திரசேகர் தான் ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய மகனை வைத்து படம் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை தன்னுடைய மகன் சாதிக்க வேண்டும் என பல திரைப்படங்களை இயக்கி தற்பொழுது சினிமாவில் உச்ச நாயகனாக மாற வைத்துள்ளார்.

இவ்வாறு இப்படிப்பட்ட தந்தையை விஜய் சரியாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும் சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவி ஷோபா அதாவது விஜயின் அம்மா இருவரும் விஜயின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் நிலையில் அதனை பெரிதாக மதிக்க மாட்டேங்கிறார் எனவும் எந்த இடத்திற்கு சென்றாலும் அவர்கள் இருவரும் தனியாக செல்வது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு விஜய் செய்வதற்கு முக்கிய காரணம் எஸ்.ஏ சந்திரசேகர் விஜயை அரசியலில் ஈடுபட வைக்க வேண்டும் என நினைத்தார் ஆனால் அது விஜய்க்கு பிடிக்காத காரணத்தினால் தந்தையை விஜய் ஒதுக்கி வைத்துள்ளார் என கூறப்படுகிறது. இவ்வாறு வயதானாலும் எஸ்.கே சந்திரசேகர் தொடர்ந்து வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் தற்பொழுது சின்ன திரையிலும் களம் இறங்கி இருக்கிறார்.

rathika 1
rathika 1

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடிக்க உள்ளார் இந்த சீரியலில் ராதிகா, விஜய்யின் நண்பர் சஞ்சீவ், நாகேஷின் மகன் ஆனந்த் பாபு, ரேஷ்மா, அஸ்வினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதனை அடுத்து இந்த சீரியலை ராதிகாவின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ரடான் மீடியா தயாரிக்கிறது.

rathika
rathika

இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் முதல் நாள் ஷூட்டிங் நிறைவடைந்திருக்கும் நிலையில் கிழக்கு வாசல் சீரியல் குழுவினர்கள் குரூப் புகைப்படம் எடுத்து அதனை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கின்றனர் இது குறித்த ப்ரோமோவை விரைவில் விஜய் டிவி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment