அஜித் காரை சுத்து போட்ட ரசிகர்கள்..! பயத்தில் 20 நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் தங்கிய சம்பவம்.! வெளிவரும் உண்மை.

அதிக ஆண் ரசிகர்கள் பட்டணத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் தொடர்ந்து ஆக்சன் மற்றும் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றியை கண்டு வருகிறார். இவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போவதால் அஜித் திரைப்படத்தை எப்போதும் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.

ஏன் அண்மையில் வெளியான வலிமை படத்தைக் கூட வேற லெவலில் கொண்டாடிட்டு தீர்த்தனர் தற்பொழுது கூட நடிகர் அஜித்குமார் தனது 61-வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாக்கி வருகிறதாம் இந்த படத்தையும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை நோக்கி படக்குழு இருக்கிறது. ஆனால் அஜித் தற்பொழுது ஐரோப்பியா நாடுகள் பக்கம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் வெகு விரைவிலேயே இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. சூட்டிங் புனேவில் நடக்கப்பட இருக்கிறது. ஏன் அஜித் எல்லாம் தமிழ் சினிமா பக்கம் வந்து ஷூட்டிங் எடுக்க மாட்டாரா என தயாரிப்பாளர் சங்கம் தொடங்கி நடிகர்கள் என பலரும் கேட்டு வருகின்றனர்.

அதற்கு உண்மையில் ஒரு காரணம் இருக்கு அஜித் என் தமிழ்நாட்டில் மட்டும் படத்தை ஷூட் செய்ய மாட்டேங்கிறார் என்றால் அவரது ஷூட்டிங் தொடங்கப்படும் தேதியிலிருந்து முடியும் வரை அனைத்தையும் அஜித் ரசிகர்கள் தெரிந்து கொள்கின்றனர் அதோடு மட்டுமல்லாமல் அஜித் ஷூட்டிங் முடிந்து வெளியே வந்தால் காரை துரத்திக் கொண்டு 90 கிலோமீட்டர் வேகத்தில் வருகின்றனர் மேலும் கூட்டமாக நின்று செல்பி எடுத்து வருகின்றனர் இதனால் ரசிகர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்த விடும் என்ற அச்சத்தில் தான் அவர் சென்னை மற்றும் தமிழ்நாட்டைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஷூட்டிங்கை நடத்தி வருவதாக கூறப்படுகிறது ஏன் வலிமை படத்தின்  ஷூட்டிங்  சென்னையில் நடந்த போது ரொம்ப அவதிப்பட்டு உள்ளார்.

வலிமை படம் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடந்தது அப்பொழுது இவர் ஷூட்டிங் முடிந்து இரண்டு, மூணு மணிக்கு வீட்டுக்கு போகும் பொழுது அப்பொழுதும் ரசிகர்கள் பைக்கில் அவரைத் தொடர்ந்து வருவார்களாம் என கூறப்படுகிறது இதனாலையே ஒரு கட்டத்தில் நடிகர் அஜித்குமார் படத்தை முடித்துவிட்டு கோகுலம் ஸ்டூடியோவில் 20 நாள் தங்கிய விட்டாராம் வீட்டிற்கு போகவில்லையாம்.  ரசிகர்களுக்காக ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்து வருகிறார் அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே அஜித் சென்னை பண்ற மாதிரி சுற்றி இருக்கும் பகுதிகளில் ஷூட்டிங் நடத்துவது இல்லையாம்.

Leave a Comment

Exit mobile version