ஆரியின் பிறந்த நாளை விமர்சியாக கொண்டாடிய ரசிகர்கள்.. அவர்களை விட ஒரு படி முன்னேறி அசத்திய தலைவன்.! அப்படி என்ன பண்ணிறார் தெரியுமா.? முழு விவரம் இதோ.

சினிமா திரை உலகில் பல பிரபலங்கள் தனது நடிப்பை வெளிபடுத்தி நடித்து வந்தாலும் மிகப்பெரிய உச்சத்தை தொட முடியாமலே இருக்கின்றனர் அப்படி சினிமா உலகில் பல வருடங்களாக நடித்து வரும் லிஸ்டில் உள்ளவர் தான் நடிகர் ஆரி.

ஆனால் இப்போது தலைகீழாக மாறி உள்ளது அதற்கு காரணம் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 ல் கலந்துகொண்டு தனது நேர்மையான நடத்தையின் மூலம் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற்று வெளியே வந்த அவருக்கு ஏராளமான ரசிகர்கள்  கிடைத்ததோடு மட்டுமில்லாமல் படவாய்ப்புகளும் குவிந்தவண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் தனது 35 வது பிறந்த நாளையும் வெகுவிமர்சையாக கொண்டாடியுள்ளார்.

ஆரி பிறந்த நாளை முன்னிட்டு அவரது தீவிர ரசிகர்கள் பலரும் ஆரியின் காமன் டிபி, பிறந்தநாள் போஸ்டர் போன்றவற்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு கொண்டாடினர் அதுமட்டுமின்றி பொது இடத்தில் மரக்கன்று நடுதல் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கியும் ஆரி ரசிகரர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று தனது பிறந்தநாளை நடிகர் ஆரி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் கொண்டாடினார்.

அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் சில பரிசுகளை கொடுத்து மகிழ்வித்தார் மேலும் குழந்தையுடனும் செல்பியும் எடுத்துக் கொண்டார் இந்த செயல் தற்பொழுது மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

aari

Leave a Comment

Exit mobile version