குஷ்பூவுக்கு பிறகு சிம்பு நடிகைக்கு கோவில் கட்டிய ரசிகர்கள்.! சிலையை பார்க்க கூட்டம் கூட்டமாக செல்லும் ரசிகர்கள்.

குறைந்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை நீதி அகர்வால்.

2017 ஆம் ஆண்டு முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமனார்.

அதன்பின் தெலுங்கில் ஓரிரு படங்களில் நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

அந்த வகையில் ஜெயம் ரவியுடன் பூமி, சிம்புவுடன் ஈஸ்வரன் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் தனது நேர்த்தியான நடிப்பை வெளிக் காட்டி தமிழில் கால்தடம் பதித்தார். மேலும் ரசிகர்களின் மனதையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

தற்போது தெலுங்கில் முன்னணி நடிகரான பவன் கல்யாணுடன் இணைந்து நடித்து உள்ளார்.

இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் ஒன்று திரண்டு அகர்வாலுக்கு சிலை அமைத்து கோயில் கட்டியுள்ளனர்.

குஷ்புவிற்கு பிறகு நடிகை நிதி அகர்வால்க்கே ரசிகர்கள் கோயில் கட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தற்போது ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக பார்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

nithi agarwal
nithi agarwal

Leave a Comment