சமந்தாவின் செயலைப் பார்த்து உச்சுக் கொட்டும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக்கொண்ட நடிகைகளில் ஒரு முக்கியமான நடிகைதான் சமந்தா இவர் தமிழில் பானாகாத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே தனது முகத்தை பதிய வைத்து அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

மேலும் இவர் தமிழில் நிறைய திரைப்படங்கள் நடித்ததன் மூலமாகவே இவர் தெலுங்கு,இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி தற்போது அவர் நடிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களுக்கும் அவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

இவ்வாறு பிரபலமடைந்த சமந்தா சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிகமாக கவர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் அதுமட்டுமல்லாமல் போட்டோ ஷூட் ஒரு பக்கம் இருந்தாலும் சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது வழக்கமாக வைத்திருக்கிறார் சமந்தா.

அந்த வகையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பாக சமந்தா ஒரு தொலைக்காட்சி டாக் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் அதில் விருந்தினராக அழைக்கப்பட்ட இவர் அந்த நிகழ்ச்சில் கலந்து கொண்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது கஷ்டத்தைப் பற்றி கூறியுள்ளார்கள்.

அதில் ஒரு பெண்மணி எனக்கு மொத்தம் ஏழு சகோதரிகள் நான் அவர்களை எல்லாம் ஆட்டோ ஓட்டி வரும் வருமானத்தில் தான் அவர்களை காப்பாற்றி வருகிறேன் என கூறியதால் மனம் உருகிப் போன சமந்தா உடனே அந்த மேடையிலேயே அந்த பெண் ஓட்டுனருக்கு நான் உங்களுக்கு ஒரு காரை வாங்கி தருகிறேன் அதை வைத்து நீங்கள் சம்பாரிங்கள் அதில் வருமானம் அதிகமாகும் என கூறியுள்ளாராம்.

samantha1
samantha1

சமந்தா அந்தப் பெண்மணிக்கு ஊக்கத்தைக் கொடுத்தது போல் இந்த விஷயத்தைச் சொன்ன உடனே தற்போது அவர் 12.5 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை அந்த ஆட்டோ பெண்மணிக்கு வாங்கி பரிசாக தந்து உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது மேலும் சமந்தாவின் செயலை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Leave a Comment