பட்டிக்காட்டு பெண்ணாக மாறிய நயன்தாரா இணையத்தில் வெளியான புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் ஷாக்.!

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வளம் வருபவர் தான் நயன்தாரா இவர் தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபல நடிகர்களுக்கு சமமாக தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

மேலும் இவர் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல் நான் உண்டு என் வேலை உண்டு என அதை எல்லாம் கொஞ்சம் கூட பரபரப்பு படுத்தாமல் பல திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியாக வலம் வருகிறார்.

நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இவருக்கும் அந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது காதல் மலர்ந்து தற்போது அவர்கள் காதலர்களாக ஊர் சுற்றி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் நயன்தாரா தமிழில் இவரது காதலனான விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்கில் ரெண்டு காதல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

nayanthara
nayanthara

அதோடு ரஜினி நடித்து வரும் அண்ணாத்த  படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா இவ்வாறு சினிமாவில் பிஸியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு உணவு கொடுக்கும் வகையில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

nayanthara
nayanthara

இந்நிலையில் நயன்தாரா தலையில் மல்லிகைபூ வைத்து புடவையில் பார்ப்பதற்கு விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்தவர் போல் தற்போது காட்சியளிக்கிறார்.

nayanthara
nayanthara

ஆம் நயன்தாராவின் புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு கிராமத்து பெண்ணாகவே மாறி விட்டார் என்று கூட கூறலாம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment