நம்ப தலைவருக்கு என்ன ஆச்சு.! பத்து தல படத்தின் பிரமோஷனுக்காக கூல் சுரேஷை வலை வீசி தேடும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருந்தாலும் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன், அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஈஸ்வரன் போன்ற சில திரைப்படங்கள் இவருக்கு தொடர் தோல்வியை கொடுத்தது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக மாநாடு என்ற ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்து பக்கா ரீ என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தையும் வெற்றி படமாக கொடுத்தார். இதனை அடுத்து தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்துதலை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான நம்ம சத்தம் என்ற பாடலை பட குழு வெளியிட்டிருந்தது. இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் டீசர் வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது பத்து தல பட குழுவினர் இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக மிக தீவிரமாக வேலை செய்து வருகிறது. இத்தனை நாட்களாக சிம்புவின் படங்களை ஸ்கூல் சுரேஷ் தான் புரமோஷன் செய்து வந்தார். அதுமட்டுமல்லாமல் வெந்து தணிந்தது காடு எஸ்டிஆர்க்கு வணக்கத்தை போடு என்ற வசனத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் கூல் சுரேஷ்.

இந்த நிலையில் எஸ்டிஆர் ரசிகராக இருந்து வரும் கூல் சுரேஷ் சமீப காலமாக ஆள் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருக்கிறார். இந்த நிலையில் பத்து தல படத்தின் பிரமோஷன் தொடங்க இருக்கிறது இருந்தாலும் கூல் சுரேஷ் இல்லாதது பெரும் வருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment