லியோ : 1000 கோடி 2000 கோடின்னு ரசிகர்கள் சொன்னாங்க.. படத்த பாத்துட்டு வெளியவரப்ப நடந்தது வேற – சினிமா பிரபலம் பேட்டி

Leo : தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவான திரைப்படம் “லியோ” பலதடைகளை தகர்த்து எறிந்து அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தை பார்த்து வருகின்றனர்.

லியோ படத்தின் கதை என்னவென்றால்.. ஆண்டனி தாஸ் மற்றும் ஹரால்டு தாஸ் என அண்ணன் தம்பிகள் இருக்கின்றனர். இதில் அண்ணன் ஆண்டனி தாஸ்க்கு  லியோதாஸ் என்கின்ற ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். குடும்பம், பிசினஸ் என சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் சில காரணங்களால் ஆண்டனி தாஸ் தனது மகளை கொன்று விடுகிறார்.

விஜய் படத்தில் நடிப்பதற்காக அஜித் படத்தை நிராகரித்த நடிகை.! சர்ச்சையில் சிக்கி சின்னா பின்னமான சம்பவம்..

இதை தாங்கிக் கொள்ள முடியாத லியோ தாஸ் சண்டை போடுகிறார் அவரையும் துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். இறந்து விட்டதாக நினைக்கின்றனர். பல வருடங்கள் கழித்து பார்த்திபன் (விஜய்) பிரபலமடைகிறார் இதை தாஸ் குடும்பம் பார்த்துவிட்டு லியோ தாஸ் சாகவில்லை.. பார்த்திபன் என்ற பெயரில் அங்கு வாழ்கிறார் என சந்தேகப்பட்டு போகின்றனர் அதன் பிறகு நடக்கும் கதை விறுவிறுப்பாக இருக்கும்…

ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது இதுவரை மட்டுமே லியோ திரைப்படம் இரண்டு நாள் முடிவில் 200 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் படத்தின் வசூல் அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.

“விடாமுயற்சி” கதையில் முதலில் நடிக்க வேண்டியது இவரா.? அட இப்படியெல்லாம் நடந்திருக்கா..

இந்த நிலையில் மீசை ராஜேந்திரன் லியோ படத்தை பார்த்து உள்ளார் அவர் சொன்னது நான் லியோ படம் பார்க்க போனப்ப விஜய் பேன்ஸ் எல்லோரும் படம்  1000 கோடி, 2000 கோடி என்று சொல்லிட்டு உள்ளே போனாங்க ஆனா படம் பார்த்துட்டு வெளியே வர்றப்ப எல்லோரும் வாயை மூடிகிட்டு சைலன்டா போனாங்க என கூறினார்.