சொந்த மகளாகவே இருந்தாலும் இப்படியா லிப்லாக் அடிப்பது.! ஐஸ்வர்யா ராய் புகைப்படத்தை பார்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

உலக அழகி என்ற அந்தஸ்துடன் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் தமிழில் முதன்முதலாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பிரசாந்த் நடிப்பில் வெளியாகிய ஜீன்ஸ் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இப்படி தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய் ஒரு காலகட்டத்தில் பாலிவுட்டில் கால் தடம் பதித்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் தூம், குரு, ஜோதா அக்பர் என தொடர்ந்து நடித்து வந்தார். பின்பு தமிழில் ராவணன் எந்திரன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார். அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அடிக்கடி தன்னுடைய மகளுடன் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஐஸ்வர்யா ராய் மகளின் புகைப்படத்தை பார்த்து பலரும் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கிறார் என பலரும் கமெண்ட் செய்தார்கள்.

இந்த நிலையில் சில வருடங்களுக்குப் பிறகும் மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரமிக்க வைத்தார். அவரின் நடிப்பு பிரமாண்டமாக இருந்தது.

நீண்ட காலம் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யாராய் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தன்னுடைய மகள் ஆரத்யாவுக்கு  உதடு உதடு வைத்து முத்தம் கொடுப்பது போல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படி லிப்லாக் அடித்து புகைப்படத்தை வெளியிடக் கூடாது இது மற்றவர்களை பாதிக்கும் என தெரியாத என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

aishwarya rai
aishwarya rai

Leave a Comment