பொன்னியின் செல்வன் பிரமோஷன் நிகழ்ச்சியில் லியோ அப்டேட் கேட்ட ரசிகர்கள்.! ஒத்த வார்த்தையில் கெத்தா பதில் சொன்ன திரிஷா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பை தற்போது காஷ்மீரில் படமாக்கப்பட்டு முடிந்து விட்டதாகவும் விரைவில் பலகுழு சென்னை திரும்ப இருப்பதாகவும் சில தகவல் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

இதனை அடுத்து இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகை திரிஷா அவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தில் நடித்திருக்கிறார் முதல் பாகத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை திரிஷா அவர்கள் இரண்டாவது கதாபாத்திரத்திலும் குந்தவையாக நடித்து மிரட்டி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பொன்னின் செல்வன் 2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி திரையில் வெளியாக இருப்பதால் இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே நடக்கும் பிரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.

அப்படி சென்னையில் உல்ல அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், மற்றும் திரிஷா, விக்ரம், கார்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது இந்த விழாவில் பேசிய திரிஷாவிடம் ரசிகர்கள் லியோ படத்தின் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு நடிகை திரிஷா அவர்கள் துணிந்து ஒத்த வார்த்தையில் கெத்தாக பதில் கூறிவிட்டு அனைவரது வாயையும் அடைத்திருக்கிறார். அதாவது லியோ படத்தின் அப்டேட் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை பற்றி பார்ப்போம் என பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்தார் நடிகை திரிஷா.

அந்த நிகழ்ச்சியில் நடிகை திரிஷா அவர்கள் லியோ படத்தின் சிறிய அப்டேட்டாவது கூறுவார் என பல ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள் ஆனால் இவர் இவ்வாறு கூறியது ரசிகர்களை பெரும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது ஏனென்றால் ஏற்கனவே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லியோ படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் படக்குழு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் அனுப்பி இருந்தது இதனால் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் ஏமாந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment