ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சூப்பர் சிங்கர்-9.! விஜய் டிவி தொலைக்காட்சியில் எப்போது தெரியுமா.?

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று தான் விஜய் டிவி விஜய் டிவியில் சீரியல்களை விடவும் இதில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் ஏராளமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் திரைத்துறையில் பின்னணி பாடவர்களாக இருந்து வரும் பலரையும் தங்களுடைய நிகழ்ச்சிக்கு வர வைத்து பிரபலமடைய பைக்கின்றார்கள் அந்த வகையில் கடந்த எட்டு வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் தற்போது இந்த நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் வருகின்ற சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு மிகவும் பிரம்மாண்டமாக துவங்க இருக்கிறது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சி வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணி அளவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இவ்வாறு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இந்நிலையில் 8 சீசன் களில் புகழ் பெற்ற நடுவர்கள் மற்றும் மூத்த இசையமைப்பாளர்கள் அடங்கிய குழு திறமையானவர்களை தேர்ந்தெடுத்து இந்நிகழ்ச்சியின் மூலம் அவர்களுக்கு நான் ஒரு இடத்தை அமைத்து தருகிறது.

அந்த வகையில் தற்பொழுது சூப்பர் சிங்கர் ஒன்பதாவது சீசனில் சிறந்த 20 போட்டியாளர்களுடன் துவங்க இருக்கிறது இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு சிறப்பான பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. வாரம் வாரம் ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு கடைசியில் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இவரை நிகழ்ச்சியில் இந்த சீசன் நடுவர்களாக அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பொன்னி தயால், மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர்கள் பணியாற்றாய் இருக்கிறார்கள் இதனை தொடர்ந்து எப்பொழுது போல பிரியங்கா தேஷ் பாண்டே மற்றும் ஆகாப் ஆகியோர்களும் தொகுத்து வழங்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment