ரசிகர்களின் கனவு ராணி சன்னி லியோன்னுக்கு கிடுக்கு பிடிபோட்ட கேரளா போலீஸ்.? 29 லட்சம் ஆட்டையை போட்டது தான் காரணமா.?

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன்.  இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் படத்தில் ஏதாவது ஒரு ரோலில் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் ஹிந்தியும் தாண்டி தமிழ், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

இவர் தமிழில் வடகறி என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் வெகுவாக குடியேறினார். சமீபத்தில் இவர் வீரமதேவி என்ற திரைப்படத்தில் ஆனால் படம் பாதியிலேயே டிராப் ஆகியது.

இதைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் கமிட்டாகி நடித்தார் அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மேலும் சன்னிலியோனுக்கு என ரசிகர்கள் கூட்டம் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ளது.

சமீபத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இரண்டு வாரங்களுக்கு முன்பு கேரளாவை சுற்றி பார்க்க சென்றார்.

அப்போது கொச்சியில் உள்ள துணிக்கடை திறப்பு விழாஒன்றிக்கு வரும்படி எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரை சேர்ந்த ஷியாஸ் என்பவர் 29 லட்சம் பணம் கொடுத்து வரச் சொன்னார்.

ஆனால் அவர் திறப்புவிழா நிகழ்ச்சியில் சன்னி லியோன் கலந்து கொள்ளாமல் போனதால் உடனடியாக கேரளா டிஜிபியிடம் ஷியாஸ் சன்னிலியோனுக்கு பணம் கொடுத்தேன் பெற்றுக்கொண்டு  மோசடி செய்துவிட்டதாக புகார் கொடுத்தார்.

sunny leon

அதன் காரணமாகவே சன்னிலியோன் இடம் உரிய விசாரணை நடத்தி கேரள டிஜிபி  குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

Exit mobile version