வனிதாவை சொல்லிவிட்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என ரவீந்தரை வச்சு செய்யும் ரசிகர்கள்.!

பிரபல தயாரிப்பாளரும், யூடூப் பிரபலமுமான ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி அன்று திருப்பதியில் இவர்களுடைய திருமணம் மிகவும் கோலாலமாக நடைபெற்றது மேலும் இவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவிலும் வைரலாக தொடர்ந்து ரசிகர்கள் சர்ச்சைக்குரிய ஏராளமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் திருமணம் முடிந்த கையோடு இவர்கள் தங்களுடைய ஹனிமூனை கொண்டாடி வரும் நிலையில் நயன்தாரா ரேஞ்சுக்கு மகாலட்சுமி மாடனுடையில் மஞ்சக்கயிறு முன்னாடி போட்டுக்கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதற்கு ரவீந்தர் வாழ்க்கைக்கு காதல் தேவை காதலுக்கு மகாலட்சுமி தேவை ஐ லவ் யூ பொண்டாட்டி என தன்னுடையஇன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார்.

இந்தப் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாக அதனை பார்த்த ரசிகர்கள் வனிதாவை சொல்லிவிட்டு நீங்களே இப்படி செய்யலாமா என கேள்வி எழுப்பி உள்ளார்கள். ஏனென்றால் மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு அதில் நீங்கள் என் இதயத்தை திருடி விட்டீர்கள் நான் அதை வைத்துக் கொள்ள அனுமதிக்கிறேன் என டுவிட் போட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளிக்க வகையில் ரவீந்தர் நீ மறந்து விட்டாய் என நினைக்கிறேன் என் இதயம் இருக்க வேண்டிய இடத்தில் உன் இதயம் இருக்கிறது ஸ்பீடை கவனிக்கவும் பொண்டாட்டி என்ன கூறியுள்ளார். இவ்வாறு கணவன் மனைவியாக இவர்கள் இருவரும் மாறி மாறி இதே போல் இன்ஸ்டாகிராமில் பேசிக்கொள்வது சோசியல் மீடியாவில் பைரலாகி வருகிறது மேலும் ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க நடிகை வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்ட பொழுது அவருடன் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரவீந்தர் முடியலடா சாமி, இதற்கு வனிதாவே பரவாயில்ல போல பீட்டரை திருமணம் செய்யும்பொழுது அவர் தான் பந்தா செய்தார் என ரவீந்தர் இப்படி எல்லாம் பேசியது என கூறி வருகிறார்கள்.

Leave a Comment