தமிழ் சினிமாவில் பலரும் இந்த திரைப்படத்தை எடுத்து விட்டால் மிகவும் பிரபலம் ஆகி விடலாம் என நினைத்து நினைத்து கனவாகவே எடுக்க முடியாமல் போன கதைதான் பொன்னியின் செல்வன் இந்த கதையை வைத்து பல இயக்குனர்களும் எப்படியாவது இந்த கதையை திரைப்படமாக மாற்றிவிட வேண்டும் என ஆசைப்பட்டு வந்தார்கள் ஆனால் பலரும் இதனை யோசித்துப் பார்த்து கைவிட்டுவிட்டார்கள்.
இருந்தாலும் தனது விடா முயற்சியினால் இயக்குனர் மணிரத்னம் இந்த கதையை திரைப்படமாக தற்பொழுது மாற்றி வருகிறார் ஆம் வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் மிகவும் பிரம்மாண்டமாக இயக்கிவருகிறார்.
அதுமட்டுமல்லாமல் இதில் விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,திரிஷா,ஐஸ்வர்யா லட்சுமி,விக்ரம் பிரபு போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் சமீபத்தில் தான் இவர்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது பற்றி தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியானது.
அதேபோல் சமீபத்தில் ஒரு புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம் அதில் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2022இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது குவாலியரில் நடைபெற்று வருகிறது என தகவல் கிடைத்துள்ளது.
BACK to work .. landed in Gwalior with #Maniratnam sir @Karthi_Offl on our way to Orchha for #PonniyinSelvan .. pic.twitter.com/0RjfonSc4l
— Prakash Raj (@prakashraaj) August 18, 2021
மேலும் இதில் ஒரு முக்கிய பிரபலம் தற்பொழுது கலந்துள்ளார் யார் அந்த முக்கிய பிரபலம் என்று கேட்டால் வேறு யாருமில்லை நடிகர் பிரகாஷ் ராஜ் தான் இவருக்கு சமீபத்தில் தான் அறுவை சிகிச்சை நடைபெற்றது இந்த நிலையில் கட்டுப்போட்ட கையுடன் கார்த்தி மற்றும் மணிரத்னம் ஆகிய இருவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார் இதனை வைத்து பார்த்த ரசிகர்கள் பலரும் இவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது என கமெண்ட் பதிவு செய்து.