அட இத்தனை முன்னணி நடிகைகளும் சர்ச்சையில் சிக்கினார்களா.! இதோ அவர்களின் சர்ச்சை விவரம்

திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் சர்ச்சையில் சிக்கியவர்கள். அந்த வகையில் பல நடிகைகள் சர்ச்சையில் சிக்கி அதைப்பற்றி கவலைப்படாமல் பிரபலமடைந்து வருகின்றன.

த்ரிஷா- இவர் தெலுங்கு திரைப்பட நடிகையாவார். இவர் திரைப்படத்திற்கு அறிமுகமாவதற்கு முன் சென்னை அழகியாக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் 1999ஆம் ஆண்டில் பிரவீன் காந்த் இயக்கத்தில் வெளிவந்த ஜோடி திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மௌனம் பேசியதே, மனசெல்லாம்,  சாமி உட்பட இன்னும் பல திரைப்படங்கள் நடித்து திரையுலகில் ஒரு கலக்கு கலக்கி உள்ளார்.

இது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து உள்ளார். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சாமி ,கில்லி போன்ற திரைப்படங்களில தான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்தது. இவருக்கு வருண் மணியுடன் திருமணம் நடப்பதாக இருந்தது ஆனால் நடக்கவில்லை அதனால் சிறிது காலம் ஆல் அட்ரஸ் இல்லாமல் இருந்தார். அதன் பிறகு ரானாவை காதலிப்பதாக சர்ச்சை கிளம்மி உள்ளது. இந்த நிலையில் தற்பொழுது பார்டி பார்டி என சுத்தி வருகிறாராம் .

நயன்தாரா- 2005 ஆம் ஆண்டில் ஹரி இயக்கத்தில் தமிழ் திரை உலகிற்கு வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. இதனைத் தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி ,கஜினி போன்ற இன்னும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் இவர் முதலில் முதல் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் 2010 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவர் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் கலக்கி வருகிறார்.இவர் தற்பொழுது வரை  மூன்று பேரை அதாவது சிம்பு, பிரபு தேவா, விக்னேஷ் சிவன் ஆகியோரை காதலித்துள்ளார் என சர்ச்சை கிளம்பியுள்ளது .

அமலா பால்- இவர் வீரசேகரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து சிந்து சமவெளி, மைனா, விகடகவி, தெய்வத்திருமகள் உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து திரை உலகில் முன்னணியில் இருந்து வருகிறார். இவர் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் சொப்பனசுந்தரி எனவே மாறிவிட்டார்.

இவர் இயக்குனர் ஏ .எல் விஜய் திருமணம் செய்து கொண்டார் ஆனால் தற்போது இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. இதனைத் தொடர்ந்து பாடகர் ஒருவரை காதலித்து வருகிறார் என சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. இவர் மக்களுக்கு அறிவுரை சொல்வதே  சமூகவலைதளத்தில் வேலையாக வைத்துள்ளார். எனவே பொதுமக்கள் இவர் மீது கடுப்பாகி வருகின்றன. தற்பொழுது இவருக்கு ஆண்களின் மீது வெறுப்பு உண்டாகியுளளது. அதுமட்டும் அல்லாமல் கவர்ச்சியான புகைபடங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார் .

ஆண்ட்ரியா- இவர் முதலில் பின்னணி பாடகராக திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த வகையில் கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் முதலில் பாடினார். அதன் பிறகுதான் பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி இன்னும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சயின் ராணியாக விளங்குகிறார். அனிருத் மற்றும் அரசியல்வாதி போன்றவர்களுடன் சர்ச்சையில் சிக்கினார்.

ஆஷா சரத்- இவர் பரதநாட்டிய கலைஞர் மற்றும் நடிகையாக வளம் வருகிறார். இவர் அதிகமாக மலையாளத் திரைப்படங்கள் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் முக்கியமாக பணியாற்றி வருகிறார். இவர் பரதநாட்டியத்தை அடிப்படையாக வைத்து மோகினியாட்டம், குச்சிப்புடி, கதகளி உட்பட நடன கலைகள் அனைத்தையும் கைவசம் ஆக கொண்டவர். இவர் முதலில் சக்கரியாயுடே கர்ப்பிணிகள், திருஷ்யம், வருஷம் உள்ளிட்ட பல படங்கள் மலையாளத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு தான் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரைப் பற்றி ஒரு ஆபாச விடியோ இணையதளத்தில் லிக்காகி உள்ளது .

ஓவியா- 2010 ஆம் ஆண்டு ஏ .சற்குணம் இயக்கத்தில் வெளிவந்த களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு முதலில் அறிமுகமானார் .அதன் பிறகு மன்மதன், அம்பு, முத்துக்கு முத்தாக ,கிருத்திகா உட்பட இன்னும் பல படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானார். 2017ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகண்டு அனைவர் மனதிலும் இடம்பிடித்தார்.

பிக்பாஸ் அவருடைய வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. இவர் மலையாளம் ,தெலுங்கு, கன்னடம் உட்பட்ட மொழிகளில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலிருக்கும் ஓவியாவுக்கு தற்பொழுது பர்த்டே வந்தது அப்போது  அவர் ஒரு பேட்டி கொடுத்தார் அதில் இப்பொழுது  நான் சரக்கை மிஸ் பண்றேன் என வருத்தத்துடன் கூறினார். இவரைப் பற்றி அதிகமான சர்ச்சைகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Leave a Comment