எடிட்டரை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் பிரபல சீரியல் நடிகை தீபா.! இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு..

வெள்ளித்திரை நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகைகள் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரபல சீரியல் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் எடிட்டருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ‘மை லவ்’ என்று குறிப்பிட்டுள்ளதால் அவரை இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. மேலும் இந்த சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தவர் தான் நடிகை தீபா.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ எடிட்டர் சாய் கணேசுவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ‘மை லவ்’ என்று கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் நடிகை தீபா தனது இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

deeepa-1

நடிகை தீபா பிரபல சீரியல் நடிகை இவர் தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும் இவருக்கு வில்லி கேரக்டர் தான் மிகப்பெரிய பிரபலத்தை தந்தது. அந்த வகையில் இவர் கடைசியாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

deepa-21

இவ்வாறு சின்னத்திரையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். மேலும் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலானது.

Leave a Comment

Exit mobile version