உன்ன வச்சு ஒரு படம் தானே இயக்கினேன்.! இயக்குனராக இருந்த என்ன அசிஸ்டண்ட் இயக்குனராக ஆக்கிட்டியே.! முன்னணி நடிகரை நினைத்து புலம்பும் இயக்குனர்.

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் ஒரே திரைப்படத்தின் மூலம் பேரும் புகழும் பெற்று விடுவார்கள், அந்த வகையில் பல இயக்குனர்களை நமது தமிழ் சினிமாவில் பார்த்துள்ளோம், அதேபோல் ஒரு சில இயக்குனர்கள் ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கி விட்டு காணாமல் போன இயக்குனர்களையும் தமிழ் சினிமாவில் பார்த்துள்ளோம்.

அதிலும் சில நடிகர்களை வைத்து படம் இயக்கினால் அவ்வளவுதான் என்று நிலைமை ஒரு சில இயக்குனர்களுக்கு வந்துவிடுகிறது, அதன்பிறகு எந்த ஒரு நடிகரும் அந்த இயக்குனருக்கு பட வாய்ப்பு தருவதில்லை. அப்படி படவாய்ப்பு இல்லாமல் பிரபல இயக்குனர் ஒருவர் மீண்டும் அசிஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி வருகிறார் அவரைப் பற்றி இங்கே காணலாம்.

தமிழ்சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகர்களின் இடத்தை பிடித்தவர் டிவி நடிகர், இவரை என்டர்டைன்மென்ட் நடிகர் என பலரும் அழைக்கிறார்கள் ஏனென்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவரின் திரைப்படத்தை ரசித்து பார்ப்பார்கள். அதிலும் குழந்தைகளை தான் அதிகமாக கவர்ந்துவிட்டார் இந்த நடிகர்.

இந்த நிலையில் டிவி நடிகரை வைத்து படத்தை எடுக்க முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் ரெடியாக இருக்கின்றன அதனால் அவரின் மார்க்கெட் கிட்டத்தட்ட 15 கோடியை எட்டிவிட்டது, ஒருபுறம் டிவி நடிகரின் வளர்ச்சி மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் மற்றொருபுறம் டிவி நடிகரை வைத்து படத்தை இயக்கிய இயக்குனரகள் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது வருத்தத்தை தருகிறது.

இந்த நிலையில் டிவி நடிகரை வைத்து படத்தை இயக்கி அதலபாதாளத்திற்கு சென்ற லிஸ்டில் மேலும் ஒரு இயக்குனர் சேர்ந்துள்ளார் அவர் வேறு யாருமில்லை டிவி நடிகரை வைத்து கராத்தே திரைப்படத்தை இயக்கியவர் தான் அந்த இயக்குனர்.

இவர் ஏற்கனவே முன்னணி இயக்குனர் அவர்களிடம் அசிஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் முதன்முறையாக கராத்தே திரைப்படத்தை இயக்கினார் ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தர முடியாமல் திணறியது அதனால் அந்த இயக்குனர் மீண்டும் முன்னணி  இயக்குனரிடம் அசிஸ்டன்ட் இயக்குனராக பணியாற்ற வந்துவிட்டாராம்.

அதேபோல் இதற்கு முன் டிவி நடிகரை வைத்து ராஜா என்னும் திரைப்படத்தை இயக்கிய ஒரு இயக்குனர் தற்போது முன்னணி நடிகர்களின் திரைப்படம் கிடைக்காததால் சொந்த செலவில் படத்தை எடுத்து வருகிறார் என கூறப்படுகிறது, இதற்கு காரணம் யாரும் படவாய்ப்பு கொடுக்காதது தான் என கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment