சந்திரமுகி 2 படப்பிடிப்பில் கதறி அழுத பிரபல பாலிவுட் நடிகை.! என்ன நடந்தது தெரியுமா.?

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ரஜினி ஜோதிகா பிரபு வடிவேலு உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 800 நாட்களுக்கு மேல் ஓடி அபார சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.

ஆனால் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் வடிவேலு கங்கான ரணவத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகை கங்கான ரணவத் அவர்கள் கதறிக்கொண்டு அழுத சம்பவம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அது மட்டும் அல்லாமல் அந்த வீடியோவை பட குழு இணையத்தில் வெளியிட்டிருக்கிறது அதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.

அதாவது நடிகை கங்கான ரணவத் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் இதுவரைக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் கூட ஒரு முறை கூட புகைப்படங்கள் எடுத்தது கிடையாது அது மட்டுமல்லாமல் அவருடன் அதிக நேரம் பேசியது கூட கிடையாது என்று கூறியிருக்கிறார் அதன் பிறகு படப்பிடிப்பின் இறுதி நாளில் நான் நடிகர் ராகவா லாரன்ஸ் இடம் இருவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வோமா என்று கேட்டிருக்கிறாராம் நடிகை கங்கான ரணவத்.

அதன் பிறகு இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் இவர்களுடைய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தில் பணிபுரியும்போது இந்த படத்தில் நடித்த நடிகர்களும் பணியாளர்களும் எனக்கு மிகவும் பிடித்து விட்டார்கள் அவர்களை விட்டு பிரிய எனக்கு மனம் வரவில்லை என்று நடிகை கங்கான ரணவத் கதறி அழுகிறார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செமம வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment