சிவகார்த்திகேயனை ஆசையாக கட்டி அணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகை சங்கீதா.! கண் கலங்கிய தருணம் இதோ..

நம்ம வீட்டுப் பிள்ளை என்ற அந்தஸ்துடன் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்து உள்ளவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இவர் சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பிறகு தன்னுடைய தனித்திறமையினால் சினிமாவில் பிரபலமடைந்தார் எனவே எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய முயற்சியினால் மட்டுமே இவ்வாறு இவர் உயர்ந்திருப்பது பலரையும் வியப்பில் அழித்திவுள்ளது.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பிறகு அது இது எது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து சில வருடங்கள் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமானார். மேலும் இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வந்த நிலையில் தற்போது சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்று தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் எனக்கு சுத்தமா டான்ஸ் வரல என எப்படியாவது விட்டுடுங்க மேம் என நடிகை சங்கீதாவிடம் சிவகார்த்திகேயன் அழது புலம்பினாராம் ஆனால் சங்கீதா முடியவே முடியாது நீ நடனம் ஆடி தான் ஆக வேண்டும் உனக்குள் நடனமாடும் திறமை இருக்கிறது என தொடர்ந்து மோட்டிவேட் செய்தாராம்.

மேலும் தற்பொழுது சிவகார்த்திகேயன் நடனம் ஆடுவதை பார்த்தால் பெருமையாக இருக்கிறது நான் இப்பொழுது சொல்லுவேன் இவ்வாறு இப்படி சிவகார்த்திகேயன் நடனம் ஆடுவதற்கு காரணம் நான் தான் என ஏனென்றால் எனக்கு அந்த அளவிற்கு சிவகார்த்திகேயனை பிடிக்கும் என சங்கீதா டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கூறி உள்ளார் அதாவது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் பைனலுக்கு சிவகார்த்திகேயன் வந்திருந்தார்.

அப்பொழுது சிவகார்த்திகேயனுக்கும் சங்கீதா நமக்கும் இடையே இருக்கும் ரிலேஷன்ஷிப்பை பற்றி கூறியிருந்தார்கள். மேலும் இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் நான் டான்ஸ் ஆடுவேன் எனக் கூறி எனக்கு நம்பிக்கை இல்லாத ஒரு திறமையை வெளிப்படுத்தி வைத்தார் சங்கீதா மேம். ஏனென்றால் உனக்கு இது வராது அது வராது என பலரும் தாழ்த்தி பேசி வந்த நிலையில் சங்கீதா மேம் தான் இது உனக்கு வரும் என கூறினார்.

பிறகு சிவகார்த்திகேயன் சங்கீதா மேம் என்னை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு என் புள்ள மாதிரியான சங்கீதா கூறுகிறார் உடனே எமோஷனலான சிவகார்த்திகேயன் ஃப்லைன் கிஸ் கொடுத்து சங்கீதா இருக்கும் இடத்திற்கு செல்கிறார். அப்பொழுது சங்கீதா சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து அன்பாக முத்தம் தருகிறார் இவ்வாறு இவர்களுடைய இந்த பாசம் ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது.

Leave a Comment