இதெல்லாம் ஒரு உருவமா எனக்கூறி செல்வராகவனை வெளியே துரத்திவிட்ட பிரபல நடிகை.! ஆனால் அவரிடமே பட வாய்ப்பு கேட்டு கெஞ்சிய நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் செல்வராகவன், இவர் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, ஏனென்றால் ஒவ்வொரு திரைப்படத்திலேயும்  வித்தியாசமான கதைக்களத்தை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் காதல் கொண்டேன் 7ஜி ரெயின்போ காலனி போன்ற திரைப்படங்கள் இவரின் திறமையை வெளி காட்டிய திரைப்படமாகும், அதேபோல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் என்பதும் கற்பனைத் திறனை போற்றும் ஒரு திரைப்படம் தான்.

இந்த நிலையில் ஒரு காலத்தில் செல்வராகவனின் உருவத்தை பார்த்து பிரபல நடிகை ஒருவர் வீட்டிற்கு உள்ளே கூட விடாமல் வெளியே துரத்தி கதவை சாத்தியுள்ளார் இந்த செய்தி பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தன்னுடைய யூடியூப் சேனல் பக்கத்தில் அறிவித்துள்ளார், அந்த காலத்தில் மிகப் பெரிய நடிகையாக வலம் வந்தவர் வைஜெயந்தி மாலா.

ஒரு காலத்தில் மிகப் பெரிய நடிகையாக வலம் வந்த வைஜெயந்தி தன்னுடைய மகனை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்வதற்காக பல இயக்குனர்களை தேடிக் கொண்டிருந்தார் அப்போது செல்வராகவன் கதை சொல்ல அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் ஆனால் அவரின் உருவத்தை பார்த்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டாராம், அதன்பிறகு செல்வராகவன் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி ஆகிய ஹிட்ஸ் திரைப்படங்களை கொடுத்து பெரிய இயக்குனராக மாறிவிட்டார்.

அதன் பிறகு மீண்டும் முன்னணி நடிகை வைஜெயந்தி மாலா தன்னுடைய மகனுக்கு ஒரு படம் செய்து தருமாறு செல்வராகவனிடம் கெஞ்சினார் ஆனால் செல்வராகவன் படம் செய்வதற்கு இஷ்டமில்லை எனக் கூறி ஒதுக்கி விட்டாராம், இன்று தமிழ்நாட்டு ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடும் செல்வராகவனை கேலி செய்ததை இலைமறை காயாக சமீபத்தில் செல்வராகவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment