30 வயதிற்குள்ளேயே பல காரணத்தினால் இறந்துபோன பிரபல தமிழ் நடிகைகள்.! இதோ லிஸ்ட்

actress
actress

Tamil actress : பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு தான் வாழ்நாள் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் சொல்கிறது. ஆனாலும் சில சமயங்களில் பெண்களும் வயது முதிர்ச்சியால் ஆண்களுக்கு முன்னாடியே இறந்து விடுகிறார்கள். அதிலும் முக்கியமாக சராசரி வாழ்க்கை ஆயுட் காலம் தாண்டாமல் 30 வயதிலேயே இறந்து போய்விடுகிறார்கள். 30 வயதிற்குள்ள பல காரணத்தினால் இறந்துபோன தமிழ் நடிகைகள் பற்றி தற்பொழுது நாம் காண்போம்.

ஷோபனா – நடிகை சோபனா சின்னத்திரையில் தனது நடிப்புத் திறமையினால் அனைவர் மனதை வெகுவாக கவர்ந்து கலக்கி வந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு வெள்ளித் திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவரின் வாழ்க்கை மிகவும் சோகத்தில் அமைந்ததால் வீட்டில் தூக்குப் போட்டுக் தற்கொலை செய்து கொண்டார். இவர் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.

மோனல் – நடிகை மோனல் சிம்ரனின் தங்கை சிம்ரனை போலவே தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ஆனால் திடீரென தற்கொலை செய்துகொண்ட இவர் அதற்கான காரணமாக எழுதிவைத்த என்னவென்றால் என் வாழ்க்கையில் நல்ல ஆண்களையே நான் பார்க்கவில்லை என்பதை எழுதி வைத்திருந்தார்.

பிரதியுஷா – நடிகை பிரதியஷா ஜுஸில் விஷம் கலந்து பொது இடத்தில் காருக்குள்ளேயே அமர்ந்து ஜூஸை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரும் இவருடைய காதலரும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளார்கள்.ஆனால் அதிர்ஷ்டவசமாக இவருடைய காதலர் உயிர் தப்பித்துவிட்டார்.

ஜெயலட்சுமி – நடிகை ஜெயலட்சுமியி எம்.ஜி.ஆர் காலத்தில் நடிகையான இவர் தன்னுடைய உடல் நலக்குறைவால் மிக இளம் வயதிலேயே இறந்து போனார்.

சபர்ணா – நடிகை சபர்ணா சென்னை மதுரவாயில் பக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்துபோனார். இவருடைய கேஸ் இன்னும் கோர்ட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.