மூன்று மடங்கு சம்பளம் தருகிறேன் படுக்கைக்கு வா என அழைத்த இயக்குனர்.! பிரபல நடிகை கூறிய அதிரடி புகார்.

சினிமா துறையில் பொதுவாக நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருந்து வருகிறது, இதுகுறித்து முன்னணி நடிகைகள் முதல் அறிமுகம் நடிகைகள் வரை அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு புகார்களை அள்ளி வீசியுள்ளார்கள்.

இப்படி இருக்க தற்பொழுது ஒரு நடிகை ஒருவர் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் பட வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் மீது பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் நடிகை மான்வி கக்ரு ஆவார், இந்த நடிகை நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா, பிகே, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்பொழுது இவர் டிவி சீரியல்கள் மற்றும் வெப்சீரியஸ்கள் என பிஸியாக நடித்து வருகிறார், சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் தன்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இயக்குனர் ஒருவார் வெப்சீரியஸ் எடுக்குறோம் அதில் நீங்கள் நடிக்கணும் என கூறினார்.

அதற்கு நான் முதலில் கதையை கூறுங்கள் பிடித்திருந்தால் சம்பளம் பற்றி பேசலாம் என கூறினேன் அவர் என்னுடைய சம்பத்தை கூறினார் அது கம்மியா இருக்கு என்றேன் உடனே சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்தி இந்த சம்பளம் ஓகேவா என்றார்.

அதற்கு ஓகே என்றேன் ஆனால் அவர் அவ்வளவு சம்பளம் என்னால் கொடுக்க முடியாது நீங்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்றார், உடனே இப்படி பேச உங்களுக்கு எவ்வளவு தைரியம் நான் போலீசில் புகார் செய்வேன் என கோபமாக அவரை திட்டிவிட்டு போனை கட் செய்து விட்டேன் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment