7 வருடங்கள் கழித்து சன் டிவியின் புதிய சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்.!

தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சியாக இருந்து வருவது தான் சன் டிவி.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலும் ஒவ்வொரு கதையை மையப்படுத்தி மிகவும் வித்தியாசமாக இருந்து வருவதால் நம்பர்-1 சேனலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. மேலும் சன் டிவி சீரியலை பார்ப்பதற்கு என்றது தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்துவருகிறது.

உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை வகித்து வருகிறது.  அதாவது கயல், தாலாட்டு உள்ளிட்ட ஏராளமான சீரியல்கள் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வானத்தைப்போல சீரியல் சமீபத்தில் முடிந்தது.  இதனைத் தொடர்ந்து பூவே உனக்காக சீரியலும் விரைவில் முடிய இருக்கிறதாம். மேலும் பூவே உனக்காக சீரியலின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ragav
ragav

இவ்வாறு இரண்டு சீரியல்களும் முடியவுள்ள நிலையில் புதிய சீரியல் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.  இந்த சீரியலில் கிட்டத்தட்ட 7 வருடங்களாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த ராகவ் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்.  மேலும் இவருக்கு ஜோடியாக திவ்யா ஸ்ரீதரன் நடிக்க இருக்கிறார்.

இது குறித்து சமீப பேட்டியில் ராகவ் இந்த சீரியல் எனக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும். மேலும் முழுக்க முழுக்க இந்த சீரியல் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கிராமத்தில் எப்படி கட்டுக்கோப்பாக ஒழுங்காக இருப்பார்கள் என்பதை தெரியப்படுத்தும் வகையிலும் இந்த சீரியலின் கதை அமைந்துள்ளதாக கூறி உள்ளார்.

Leave a Comment