ஷங்கருக்கே ஆணையிடும் பிரபல நடிகர்.! ஒன்னும் பண்ண முடியாமல் தவிக்கும் நிலைமை.

தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் ஷங்கர் இவரது திரைப்படங்கள் என்றால் மிகப்பெரிய பட்ஜெட்டில் தான் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது பொதுவாகவே ஷங்கர் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் ஷங்கர் தனது வித்தியாசமான கதைகளை கொண்டு பல திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

அண்மையில் இவரது மகள் திருமணம் முடிந்தது அதற்காகவே ஷங்கர் பல கோடி வரை செலவு செய்ததாக கூறப்பட்டது மேலும் ஷங்கர் தற்பொழுது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார் இந்த திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் ஷங்கர் அடுத்ததாக ராம் சரனை வைத்து புதிதாக ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்.

ராம்சரன் தற்பொழுது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரத்தம் ரணம் ரௌத்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்த நிலையில் உடனே ஆகஸ்ட் மாதத்தில் ஷங்கர் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நேரத்தில்தான் ஷங்கருக்கு ராம்சரன் ஒரு கட்டளை போட்டுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது இந்தியன்2 பிரச்சனை காரணமாக மற்ற மொழிகளில் படம் இயக்க கூடாது என லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளதால் இது சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து விட்டால்தான் உங்களது திரைப்படத்தில் நடிப்பேன் என கூறினாராம்.

shankar783

மேலும் இந்த லைகா நிறுவனத்தினால் தான் இது போன்ற நடிகர்கள் என்னை கோபபடுத்தியதாக ஷங்கர் மிகவும் கடுப்பில் இருப்பதாக இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது எல்லா பிரச்சனையை முடித்து விட்டு ஷங்கர் ராம் சரணை வைத்து இயக்கும் திரைப்படம் மிகவும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என பலரும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version