திரையரங்கிற்கு வராமல் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிரபல நடிகரின் திரைப்படம்.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்

கொரோனா காலகட்டத்தில் திரைஉலகம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இன்னும் பல நடிகர்களின் திரைப்படம் திரைக்கு வராமல் தாமதம் ஆகிக் கொண்டிருக்கின்றன ஏனென்றால் இன்னும் சாதாரண சூழ்நிலை மாறவில்லை.

திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில்  ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான் ஒளிபரப்பப்பட்டது.  இந்த நிலையில் பல தொலைக்காட்சிகள் நேரடியாக புதிய திரைப்படத்தை ஒளிபரப்பி வருகிறார்கள்,  அதிலும் சன் தொலைக் காட்சி சில புதிய திரைபடத்தை திரையரங்கில் வராமல் நேரடியாக தீபாவளியை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நாங்க ரொம்ப பிசி திரைப்படத்தை டிவியில் ஒளிபரப்பினார்கள்.

திரையரங்கிற்கு வராமல் நேரடியாக டிவியில் வெளியான முதல் தமிழ் திரைப்படம்.  அதைத்தொடர்ந்து இனி ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புதிய திரைப்படத்தை தயாரித்து நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறார்களாம் சன் நிறுவனம்.

இந்த நிலையில்  பிரபல நடிகரின் திரைப்படத்தை வருகின்ற பொங்கலுக்கு நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறார்கள் சன் நிறுவனம்.  அது வேறு யாரும் கிடையாது விக்ரம் பிரபுவின் திரைப்படம் தான்.  விக்ரம் பிரபு சமீபகாலமாக தோல்வி திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.

விக்ரம் பிரபு இளைய திலகம் பிரபுவின் மகன். விக்ரம் பிரபு வந்த புதிதில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களுக்கு டாப் கொடுத்தவர். ஆனால் போகப்போக அவரது திரைப்படங்கள் மோசமான விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் விக்ரம் பிரபுவின் புலி குத்தி பாண்டியா என்ற புதிய திரைப்படத்தை தயாரித்து வருகிறது இந்த திரைப்படத்தை முத்தையா இயக்கி வருகிறார்,  இந்த திரைப் படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக இரண்டாவது முறையாக லட்சுமி மேனன் இணைந்துள்ளார் இதற்கு முன்பு கும்கி திரைப்படத்தில் இணைந்திருந்தார்.

படத்திற்கு புலிகுத்தி பாண்டியன் என பெயர் வைத்துள்ளார்கள் இந்த திரைப்படத்தை வருகின்ற பொங்கலுக்கு சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறார்கள். இந்த திரைப்படம் விக்ரம் பிரபுவிற்கு ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment