நிஜ வாழ்க்கையில் என்னை ஒரு துரோகி போல பார்க்கிறார் பிரபல நடிகர் – ஓபன்னாக சொன்ன தேவயானியின் கணவர்.!

மும்பையைச் சேர்ந்த தேவயானி தமிழில் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்து இப்போது வரையிலும் ஏதோ ஒருவகையில் சினிமா உலகில் தலைகாட்டி கொண்டுதான் இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடிகை தேவயானி விஜய், விக்ரம்,  கமல் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தன்னை உயர்த்திக் கொண்டார்.

இவரது நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அதிக படங்களில் நடித்து அசத்தினார். தமிழை தாண்டி இவர் பெங்காலி,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வெற்றியை ருசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த தேவையானி.

2001ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த நடிகரும், இயக்குனருமான ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார் இவரது திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்காததால் திருத்தணியில் இவரது நண்பர்கள் முன்னிலையில் பெறுமானம் நடந்தது. ஆனால் இருதரப்பு பெற்றோர்களும் இவர்களின் மீது செம்ம கோபமாக இருந்தனர் அதிலும் குறிப்பாக தேவயானியின் குடும்பம் ராஜகுமாரன் மீது பல்வேறு வழக்குகளை போட்டு தள்ளியது.

நாட்கள் ஓட ஓட ராஜகுமாரனுக்கு தேவயானிக்கும் இரு மகள்கள் பிறந்தனர் அதன்பின் தேவயானியின் குடும்பம் தற்போது பேச ஆரம்பித்து விட்டது. இருப்பினும்  தேவயானியின் தம்பி நகுல் மட்டும் அவரது அக்கா தேவயானி மற்றும் குழந்தைகளுடன் பேசினாலும் ராஜகுமாரன்னுடன் மட்டும் பேசுவதே இல்லையாம். தேவயானியிடமே அவ்வபோது தான் பேசுவாராம் ராஜகுமாரனை சுத்தமாக  கண்டுக்கவே மாட்டாராம்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஜகுமாரன் பேசியது : தேவயானியின் தம்பி எனது மைத்துனருமான நகுல் என்னிடம் சுத்தமாகப் பேசுவதே இல்லை நான் என்ன தப்பு செய்தேன் என்னை ஒரு தேசத்துரோகி போல அவர் பார்க்கிறார். மாமியார் மற்றும் அவரை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டாலும் நகுல் மட்டும் என்னை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என கூறி பேசியுள்ளார் தேவயானியின் கணவர் ராஜகுமாரன்.

 

Leave a Comment