அஜித்தை தொடர்ந்து பிரபல நடிகரும்.. விக்னேஷ் சிவன் கதையில் நடிக்க மறுப்பு.? நாலா அடிவாங்கும் நயன்தாராவின் கணவர்

நடிகர் அஜித்குமார் தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரம் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “துணிவு” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வசூலில் 210 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது இந்த திரைப்படத்தின் வெற்றியை அஜித் பெரிய அளவில் கொண்டாடவில்லை என்றாலும்..

அதே சந்தோஷத்துடன் ஏகே 62 படத்தில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார். அதன்படி லைகா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 62 திரைப்படம் உருவாக இருந்தது ஆனால் கதை அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்பதால் மாற்றங்கள் செய்ய சொன்னது சிறு இடைவெளிக்கு பிறகு விக்னேஷ் சிவன்..

சொன்ன கதையும் அஜித்திற்கும் சரி, லைகா நிறுவனத்திற்கும்.. பிடிக்காமல் போனதால் அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை போட்டு தற்பொழுது படத்திற்கான வேலைகளை பார்த்து வருகிறது. ஏகே 62 படத்தில் இருந்து வெளியேறிய விக்னேஷ் சிவன் அடுத்து ஒரு படம் பண்ண தற்போது நடிகர்களை தேடி வருகிறார்.

இதுவரை எந்த ஒரு நடிகரும் சிக்காமலேயே இருக்கின்றனர் காரணம் ஏகே 62 படத்தின் கதையை தான் பல்வேறு நடிகர்களிடம் சொல்லி வருகிறாராம். அஜித்திற்கு முன்பு சிவகார்த்திகேயனிடம் இந்த கதையை கூறி இருக்கிறார் அவரும் முழு கதையையும் கேட்டுவிட்டு முடியாது எனக் கூறி இருக்கிறார் அதன் பிறகு தான் அஜித்திடம் போய் சென்று இருக்கிறது.

அவரும் தவிர்த்து விட வேறு வழி இல்லாமல் இந்த கதையை விஜய் சேதுபதியிடம் சொல்லி இருக்கிறார். மார்க்கெட்டுக்கு ஏற்றம், இறக்க்கம் சகஜம் என கூறி இந்த படத்தில் நடிக்கிறேன் என விஜய் சேதுபதி கூறியிருக்கிறாராம். சிவகார்த்திகேயன், அஜித் தவற விட்ட இந்த கதையை ஒரு ஹிட் படமாக கொடுக்க விக்னேஷ் சிவன் அதிகம் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version