சிம்புவை சந்தோஷப்படுத்த பொய்யான வசூல் கணக்கு..! வெளிவரும் உண்மை…

நடிகர் சிம்பு தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த படங்களும் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறுகின்றன இவர் கடைசியாக நடித்த மாநாடு திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு இந்த படத்தை முன்னணி இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.

பிரபல தயாரிப்பாளர் ஐசிரி கணேஷ் மிக பிரம்மாண்ட பொருள் செலவில்  தயாரித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், neeraj madhav, siddhi idnani, kayadu lohar மற்றும் பலர்  நடித்திருந்தனர். இந்த படம் முழுக்க முழுக்கமாக வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் ஒருவன் பாம்பே பக்கம் போய் சம்பாதிக்க போறான் ஆனால் அங்கு வேறு வழி இல்லாமல் அடியாளாக மாறி மிகப்பெரிய டானாக மாறுகிறான்என்பதே படத்தின் கதை.

சிம்பு படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது உடல் அமைப்பை ஏற்றி இறக்கும் சூப்பராக நடித்திருந்தார் படம் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்று சூப்பராக ஓடியது இந்த படம் நான்கு நாட்களில் மட்டுமே 55 கோடி வசூல் செய்ததாக அப்பொழுது ஒரு தகவல் வெளியானது. ஆனால் உண்மையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் அப்பொழுது வெளியாகி மொத்தமாகவே 55 கோடி தான் வசூல் செய்ததாம் விஷயம் தெரிந்த ஒரு சிலர் கூறுகின்றனர்.

நடிகர் சிம்புவை சந்தோஷப்படுத்த தயாரிப்பாளர் சைடுல இருந்து   4 நாட்களில் 55 கோடி வசூல் செய்ததாக பொய் கணக்கு காட்டி உள்ளனர். இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Comment